இலங்கை: கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
மட்டக்களப்பு: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இதுவரை கருணா மற்றும் பிள்ளையான் ஆதிக்கம் இருந்து வந்தது. தற்போது இது முடிவுக்கு வந்துள்ளது. நடந்து முடிந்துள்ள தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு (தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு) 11 இடங்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 7 இடங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 இடங்களும்கிடைத்தன.
மகிந்த ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 14 இடங்கள்தான் கிடைத்தன. இந்த கட்சி சார்பில்தான் கருணாவின் சகோதரி முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பிள்ளையானும் போட்டியிட்டார்.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் ஆகியவை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தற்போது ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.
கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தனும் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவும் கையெழுத்திட்டு ஞாயிற்றுக்கிழமை பகல் மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கரமவிற்கு அனுப்பிவைத்தனர்.
இதனிடையே முஸ்லிம் ஒருவரை முதல்வராக ஏற்கவும் தாங்கள் தயார் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications