நெருங்கும் ஜெனிவா கூட்டம்! பிப்.8-ந் தேதி இந்தியா வருகிறார் மகிந்த ராஜபக்சே!
கொழும்பு: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் ஜெனிவாவில் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில் வரும் 8-ந் தேதி இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெனிவா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கடுமையான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவரும் நிலை இருக்கிறது. இத்தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது தமிழகத்தின் கருத்தாக உள்ளது. ஆனால் தமக்கு ஆதரவாக இந்தியாவை திசை திருப்ப இந்திய தலைவர்களை சந்திக்க மகிந்த ராஜபக்ச வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது.
புத்தகயாவில் உள்ள ஆலயத்தில் வழிபாடு நடத்தவே ராஜபக்சே வருகிறார் என்று கூறப்பட்டாலும் அவர் ஜெனிவா கூட்டத்தை முன்வைத்தே இந்தியாவுக்கு வருகிறார் எனக் கூறப்படுகிறது.
கடந்த முறை சாஞ்சிக்கு வந்த ராஜபக்சேவுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ மத்திய பிரதேச மாநிலத்துக்கே சென்று போராட்டம் நடத்தியிருந்தார். மேலும் மீண்டும் ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதித்தால் பிரதமர் மன்மோகன்சிங் வீட்டை முற்றுகையிடுவோம் என்றும் வைகோ அறிவித்திருக்கிறார். இந்நிலையில் ராஜபக்சே, இந்தியா வருகை தர இருப்பது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications