பிரெக்ஸிட் வாக்கெடுப்பு... 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்த பிரிட்டிஷ் பவுண்ட் மதிப்பு!
லண்டன்: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிய வேண்டுமா? என்ற பொது வாக்கெடுப்பு காரணமாக இன்று பிரிட்டனின் அதிகாரப்பூர்வ நாணயமான பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்பு தட தட வென சரிந்தது.
கடந்த 1985-க்குப் பிறகு, அதாவது 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது பவுண்ட் ஸ்டெர்லிங்.
இப்போதைய நிலவரப்படி 10 சதவீதம் வீழ்ச்சியடைந்து 1.33 டாலராக உள்ளது பவுண்ட் மதிப்பு.

உலகின் மதிப்பு மிக்க நாணயங்களில் ஒன்று பவுண்ட் ஸ்டெர்லிங். யூரோ மற்றும் டாலரின் மதிப்பை விட உயர்ந்தது பவுண்ட்.
பிரெக்ஸிட் முடிவுகள் வரும் வரை 1.50 டாலராக இருந்தது பவுண்டின் மதிப்பு. முடிவுகள் வெளிவர ஆரம்பித்த உடனே தடதட வென சரிய ஆரம்பித்தது பவுண்ட். வட கிழக்கு இங்கிலாந்து மக்கள், வெளியேற வேண்டும் என வாக்களித்தது தெரிய வந்ததுமே 1.43 டாலராக இறங்கியது பவுண்ட்.
அடுத்ததாக லண்டன் பங்குச் சந்தையில் 7 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டது. தொடர்ந்து பவுண்ட் மதிப்பு சரிந்து, 1.33 டாலராக வீழ்ந்தது.
ஐரோப்பிய யூனியனின் பொது நாணயமான யூரோவுக்கு நிகரான பவுண்ட் மதிப்பும் 7 சதவீதம் வீழ்ந்து 1.20 யூரோவானது.
2008-ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடியின் போது கூட இந்த அளவு பவுண்ட் மதிப்பு சரிந்ததில்லை என நாணய மாற்று வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications