தகவல் தொழில்நுட்ப உலகில் அதிரடி டீல்: ஈஎம்சியை 67 பில்லியன் டாலருக்கு வாங்கும் டெல்!
நியூயார்க்: அமெரிக்காவின் பிரபல தகவல் சேகரிப்பு நிறுவனமான ஈஎம்சியை (EMC2) மெகா கணிப்பொறி நிறுவனம் டெல் 67 பில்லியன் டாலருக்கு வாங்க முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் ஈஎம்சி பங்குதாரர்கள், ஒரு பங்குக்கு 33.15 டாலரை பெறுவார்கள். இதில் 24.05 டாலர் ரொக்கமாகவே கிடைக்கும்.
கட்டுப்பாட்டாளர்களின் ஒப்புதலைப் பெறும் பட்சத்தில், உலகிலேயே மிகப்பெரிய வர்த்தகமாக இது அமையும்.

டெல் நிறுவன கம்ப்யூட்டர்களுக்கான தேவை சந்தையில் பெருகி வரும் இந்த சூழலில், ஈஎம்சி போன்ற தகவல் சேகரிப்பு நிறுவனம் உடனிருப்பது வளர்ச்சிக்கு உதவும் என்பதால் இந்த வர்த்தகத்தில் டெல் ஆர்வம் காட்டியது.
"தகவல் தொழில்நுட்ப சந்தையில் அடுத்த தலைமுறையினருக்கான தேவையை நிறைவேற்ற டெல் - ஈஎம்சி இணைவு தேவைப்படுகிறது," என டெல் நிறுவன அதிபர் மைக்கேல் டெல் தெரிவித்துள்ளார்.
"உண்மைதான்... புதிய சகாப்தத்தில் இப்படி ஒரு புதிய நிறுவனம் அடுத்த தலைமுறைக்கு தேவைதான்," என ஈஎம்சி அதிபர் ஜோ டுச்சி கூறியுள்ளார்.
டெல் - ஈஎம்சி புதிய நிறுவனத்துக்கு மைக்கேல் டெல் தலைவர் மற்றும் சிஇஓவாக இருப்பார்.
இந்த வர்த்தகத்தின் உண்மையான மதிப்பு ஈஎம்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விஎம்வேர் நிறுவனத்தின் கையில் இருக்கிறது. ஈஎம்சி கைமாறிய பிறகும், விஎம்வேர் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டாளராகத் திகழும் என்பது ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும்.
வரும் 2016 மே - அக்டோபருக்குள் டெல் - ஈஎம்சி வர்த்தக ஒப்பந்தம் முழுமையடையும் எனத் தெரிகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் டெல் - ஈஎம்சி வர்த்தக ஒப்பந்தம் புதிய புரட்சியாகப் பார்க்கப்படுகிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications