வேகமாக வளரும் இந்திய பொருளாதாரம்... ஜிடிபி 7.9 சதவீதமாக உயர்வு !
டெல்லி: கடந்த மார்ச் காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி வளர்ச்சி 7.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது உலகின் வேகமான வளர்ச்சி என்று கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய புள்ளியல் துறை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிட்டு வெளியிடுகிறது. அதன்படி 2015-16 நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரையிலான நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வேளாண் மற்றும் பிறதுறைகளின் உற்பத்தி அதிகரித்தன் காரணமாக, வளர்ச்சி அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய புள்ளியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2015-16ம் ஆண்டின் முதல் காலாண்டில் 7.5 சதவீதமும், இரண்டாம் காலாண்டில் 7.6 சதவீதமும், மூன்றாம் காலாண்டில் 7.2 சதவீதமும் பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டியிருந்தது. இதன்மூலம் 2016ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதன்படி 2015-16 நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரையிலான நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது இது வேகமான வளர்ச்சி ஆகும்.
மதிப்பீட்டு காலத்தில், உள்கட்டமைப்பு, சேவைத்துறை மற்றும் உற்பத்திசார்ந்த வளர்ச்சி நடவடிக்கைகள் எதிர்பார்த்தபடி உள்ளதாகவும், இதனால் ஜிடிபி வளர்ச்சியடைந்துள்ளதாகவும் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications