கோடை வெயில் அதிகரிகப்பு - எலுமிச்சை விலை எகிறல்
நெல்லை: நெல்லை மாவட்டம் புளியங்குடியில் கோடை வெயில் காரணமாக எலுமிச்சை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் எலுமிச்சை உற்பத்தி மற்றும் விற்பனையில் நெல்லை மாவட்டம் புளியங்குடி முதலிடத்தில் உள்ளது. புளியங்குடி அருகே டிஎன் புதுக்குடியில் தனியார் வணிக வாளகத்தில் எலுமிச்சை ஏலம் விடுவதற்காக 29 கடைகள் உள்ளன.
எலுமிச்சை உற்பத்தி ஆண்டு முழுவதும் இருந்தாலும் கோடை காலத்தில் தான் எலுமிச்சம் பழத்திற்கு அதிக வரவேற்பு ஏற்படும். சாதாரண காலங்களில் ஆயிரம் பழங்கள் ரூ.500 முதல் ரூ.700 வரை விலை போகும். கோடை காலத்தில் இதை விட கூடுதலாக ரூ.5 ஆயிரம் வரை விற்பனையாகும்.

கடந்த வாரம் புளியங்குடி மார்க்கெட்டில் 1000 எலுமிச்சை பழங்கள் ரூ.3500க்கு விற்கப்பட்டது. ஆனால் இன்று அவை ஆயிரம் பழங்கள் (முதல் தரம்) ரூ.5000 வரை விற்கப்பட்டு வருகிறது.
வெயில் நீடிக்கும் பட்சத்தில் இந்த விலையில் மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
எலுமிச்சம் பழங்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
எலுமிச்சைக்கு நிலையான விலை கிடைக்க எலுமிச்சை சாறு தொழிற்சாலை மற்றும் குளிர் பதன கிடங்கு அமைக்கும் திட்டங்களை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அப்படி குளிர்பாதன கிடங்குகள் அமைக்கப்பட்டால் புளியங்குடி எலுமிச்சை மார்க்கெட்டில் இருந்து வெளிநாடுகளுக்கும் எலுமிச்சை பழத்தை ஏற்றுமதி செய்யலாம். இதனால் புளியங்குடி சுற்று வட்டாரம் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையும் எனவும் விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications