4 ஆண்டுகளில் ஐ.டி. வேலைவாய்ப்பு 50 சதவீதம் குறையும்: கிரிசில் 'திடுக்' தகவல்
மும்பை: அடுத்த நான்கு ஆண்டுகளில் தொழில்நுட்ப துறையில்(ஐ.டி.) வேலைவாய்ப்பு 50 சதவீதம் குறையும் என்று கிரிசில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு 7 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் என்ஜினியரிங் பட்டம் பெறுகிறார்கள். அதில் பலர் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிய விரும்புகிறார்கள். இந்நிலையில் அடுத்த நான்கு ஆண்டுகளில் ஐ.டி. துறையில் வேலைவாய்ப்பு 50 சதவீதம் குறையும் என்று கிரிசில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 2013-2014 நிதியாண்டில் ஐ.டி. நிறுவனங்கள் 1.05 லட்சம் பேரை பணியமர்த்தும் என்றும் இந்த எண்ணிக்கை 2017-2018ம் நிதியாண்டில் 55 ஆயிரமாக குறையும் என்றும் கிரிசில் கணித்துள்ளது.

தனியார் வேலைகளில் தற்போது 24 சதவீதம் அதாவது 31 லட்சம் பேரை ஐ.டி. துறை தான் பணியமர்த்தியுள்ளது. ஐ.டி. துறையில் வேலைவாய்ப்பு குறைவதன் தாக்கம் பொது வேலைவாய்ப்பிலும் தெரியும்.
முன்னணி ஐடி நிறுவனங்களான டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ ஆகியவைக்கு நான்கில் 3 பங்கு வருமானம் பொருளாதாரத்தில் மந்தமாக உள்ள வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து தான் வருகிறது. அந்நாடுகளில் பொருளாதார நிலைமை சரியில்லாததால் செலவை குறைக்குமாறு அவை வலியுறுத்துகின்றன.
ஐ.டி. துறையில் ஊழியர்களின் சம்பளம் தான் அதிக செலவு என்பதால் பலரின் வேலை பறிபோகிறது. 2013-2014ம் நிதியாண்டில் ஐ.டி. நிறுவனங்களின் செலவில் 60 சவீதம் ஊழியர்களின் சம்பளம் தான். இதனால் ஐ.டி. நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வதிலும், புதியவர்களை பணியமர்த்தாமல் இருப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றன.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications