27% பெட்ரோல் பங்குகள் இனி பிற்படுத்தப்பட்டவர்களுக்கே- மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையங்கள் துவங்க ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) பிரிவினருக்கான ஒதுக்கீட்டினை 27 சதவிகிதமாக மத்திய பெட்ரோலிய அமைச்சரகம் அதிகரித்துள்ளது.
இந்த ஒதுக்கீடு சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களுக்கும் பொருந்தும் என பெட்ரோலிய அமைச்சரகம் அறிவித்துள்ளது.
தற்போது நாடுமுழுவதும் 40,000 பெட்ரோல் பங்குகள் உள்ளன. மத்திய அரசு மேலும் 35,668 இடங்களில் புதிதாக பெட்ரோல், டீசல் விற்பனை மையங்களை துவக்கவும், 7,000 கேஸ் விநியோக உரிமத்திற்கும் விளம்பரம் செய்துள்ளது.

இதில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 22.5% ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கு 49.5% ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 27% ஓபிசி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு பிரிவினர் ஆகியோருக்கும் இந்த மூன்று பிரிவுகளிலும் சில இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் இந்த ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படவில்லை. பாஜக கூட்டணி ஆட்சிகாலத்தில் தான் முதல் முறையாக ஓபிசி பிரிவினருக்கு 27% ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
இந்த விற்பனை மையங்கள் ‘ஏ சைட்' என்று அழைக்கப்படுகின்றன. பெட்ரோல் சில்லறை விற்பனை மையங்களை துவங்க நிலம் வாங்குவதில் தொடங்கி, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது வரை ரூ.50 லட்சம் முதல் 60 லட்சம் வரை ஒரு முகவருக்கு செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இட ஒதுக்கீட்டையடுத்து இதுவரை பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்து வந்தவர்களில் ஒரு பிரிவினர் எதிர் குரல் எழுப்பப் போவது என்னவோ நிச்சயம்...
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications