முடங்கிய தபால் துறை... அவதிப்படும் பொது மக்கள்

7வது ஊதிய குழுவை 2014ம் ஆண்டு ஜனவரி முதல் அமல்படுத்த வேண்டும். 50 சதவீதம் பஞ்சப்படியை சம்பளத்துடன் இணைக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தனியார் மயமாக்கும் திட்டத்தையும், ஆட்குறைப்பு செய்யும் திட்டத்தையும் கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய ஊழியர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய போராட்டம் தொடங்கி நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் ஊழியர்கள் யாரும் பணிக்கு வராததால் மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் வெறி்ச்சோடின. இதனால் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தபால் நிலையங்களில் கடித போக்குவரத்து முற்றிலும் முடங்கி கிடக்கின்றன. இதனால் தபால்கள் மலை போல குவிய தொடங்கியுள்ளன. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை இந்த போராட்டத்தில் 2300 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
கோரிக்கையை வலியுறுத்தி பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். தபால் அலுவலக சங்க தலைவர் மைக்கேல் ராஜ் தலைமையில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. போராட்டம் வலுவடைந்து வருவதால் பொதுமக்களுக்கு வரவேண்டிய முக்கிய கடிதங்கள், பாலிசி விபரங்கள், சேமிப்பு கணக்குகள், வேலை வாய்புக்கான உத்தரவுகள், மற்றும் அவற்றுக்கு தபால் நிலையங்கள் மூலம் செலுத்த வேண்டிய கட்டணங்கள் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் அடியோடு முடங்கியுள்ளன.
இதனால் பொதுமக்கள் திகைப்பில் உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் வங்கிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தின. இதனால் வங்கி பணிகள் அடியோடு முடங்கி ஏடிஎம்மில் கூட பணம் எடுக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications