ஆரோக்கியா பாலைத் தொடர்ந்து பிற பால் விலையும் நாளை உயர்வு.. தயிர் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்கிறது!
சென்னை: ஆவின் பால் விலை உயர்வைத் தொடர்ந்து தனியார் பால் விலை உயர்ந்து வருகிறது. ஏற்கனவே ஆரோக்கியா பால் விலை உயர்த்தப்பட்டது. தற்போது பிற தனியார் பால் நிறுவனங்களும் நாளை பால் விலையை உயர்த்துகின்றன.
திருமலா, ஹெரிட்டேஜ், டோட்லா, ஜெர்சி ஆகிய தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.4 உயருகிறது.
தயிர் விலையும் அதிகரிக்கிறது. தயிர் விலை லிட்டருக்கு ரூ.12 கூடுகிறது.

தனியார் பால் விலை உயர்வு
திருமலா, ஹெரிட்டேஜ் புல்கிரீம் பால் லிட்டர் ரூ.48-ல் இருந்து 52 ஆகவும் நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ.44-ல் இருந்து 48 ஆக உயருகிறது.

சமன்படுத்திய பால்
சமன்படுத்திய பால் லிட்டர் ரூ.40-ல் இருந்து 44 ஆகவும் இருமுறை சமன்படுத்திய பால் ரூ.36-ல் இருந்து 40 ஆகவும் அதிகரிக்கிறது.

டோட்லா, ஜெர்சி
டோட்லா, ஜெர்சி நிறுவனங்கள் பால் லிட்டருக்கு ரூ.2 முதல் 4 வரை உயர்த்துகின்றன.

6ம் தேதி ஆரோக்கியா விலை உயர்வு
கடந்த 6-ந் தேதி ஆரோக்கியா பால் லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் மற்ற தனியார் பால் நிறுவனங்களும் பால், தயிர் விலையை உயர்த்துகின்றன.

தயிர் விலை கிடுகிடு உயர்வு
தனியார் தயிர் பாக்கெட் விலை ரூ.10-ல் இருந்து 12 ஆக உயருகிறது. 60 மில்லி தயிர் கப் ரூ.1 அதிகரிக்கிறது. 100 மில்லி தயிர் கப் ரூ.10-ல் இருந்து 12 ஆகவும், 120 மில்லி தயிர் கப் ரூ.12-ல் இருந்து 14 ஆகவும், 200 மில்லி தயிர் கப் ரூ.15-ல் இருந்து 18 ஆகவும், 400 மில்லி தயிர் கப் ரூ.32-ல் இருந்து 35 ஆகவும் அதிகரிக்கிறது.

இதுவரை 5 முறை உயர்வு
தனியார் பால் விலை இந்த ஆண்டு மட்டும் 5 முறை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வருடத்தில் லிட்டருக்கு ரூ.12 உயர்த்தி உள்ளனர். உயர்த்தப்பட்ட தனியார் பால் விலையை விட ஆவின் பால் குறைவாக உள்ளது. 1 லிட்டருக்கு ரூ.7 குறைவாக இருக்கிறது.

விலை உயர்வைத் தவிருங்கள்
தனியார் பால் நிறுவனங்கள் அடிக்கடி விலையை உயர்த்துவதை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க மாநில தலைவர் பொன்னுசாமி எச்சரித்துள்ளார். அவர் கூறுகையில், மின்சாரம், பஸ் கட்டணத்தை அரசு நிர்ணயிப்பது போல் தனியார் பால் விலையையும் அரசு நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் விலையை கட்டுப்படுத்த முடியும். ஆவினுக்கு வரக்கூடிய பால் கொள்முதலை தடுப்பதற்காக இந்த விலை ஏற்றம் செய்யப்படுகிறது என்றார் அவர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications