பூசணி விலை திடீர் சரிவு ... விவசாயிகள் தவிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காய்கறிகளின் விலையி்ல் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர், கழுகுமலை, கடலையூர், நகலாபுரம், புதூர், இலம்புவனம் உள்ளிட்ட கிராமப்புறங்களில் காய்கறிகள் பயிர் செய்யப்பட்டு வருகின்றன.
இதில் பூசணி பயிர் செய்ய செலவு குறைவாக இருப்பதால் பல்வேறு பயிர்களுக்கு இடையே இதையும் விவசாயிகள் ஊடு பயிராக விதைத்துள்ளனர். ஆனால் இந்தாண்டு போதிய மழை பெய்யவில்லை. இதனால் கிணறு மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வந்தனர்.
இதன் காரணமாக செடிகளில் பூசணிகள் அதிகமாக விளைந்துள்ளதால் கோவில்பட்டி மார்க்கெட்டுக்கு அதிக அளவில் பூசணிக்காய் வர தொடங்கியுள்ளது.

கடந்த வாரம் வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து ரூ.10க்கு கொள்முதல் செய்து ரூ.12க்கு விற்பனை செய்தனர். இந்நிலையில் அவற்றின் விலை திடீரென சரிந்ததால் ரூ.5க்கு வாங்கி ரூ.7க்கு விற்க தொங்கியுள்ளனர் வியாபாரிகள்.
இதனால் விவசாயிகள் வேதனை அடைய தொடங்கியுள்ளனர். விவசாயிகள் பலர் இதன் விதைகளை வெளிமாநிலங்களில் இருந்து கிலோ ரூ.1500க்கு வாங்கி வந்து விதைத்துள்ளனர்.
கொடிக்கு சராசரியாக 6 காய்கள் காய்,த்தபோதும் எதிர்பார்த்த விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றமும், கலக்கமும் அடைய தொடங்கியுள்ளனர். நஷ்டத்தை ஈடு செய்ய அரசுதான் உதவ வேண்டும் என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications