மும்பை பங்குச் சந்தையில் பயங்கர வீழ்ச்சி- 1,624 புள்ளிகள் சரிவை கண்டது- ரூ.7 லட்சம் கோடி இழப்பு!!
மும்பை/ டெல்லி: சீனா பங்குச் சந்தை வீழ்ச்சியால் இந்திய பங்குச் சந்தைகள் இன்று மிகவும் பயங்கரமான வீழ்ச்சியை எதிர்கொண்டது. மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தின் முடிவில் 1,624 புள்ளிகள் சரிவை கண்டது. இந்திய பங்குச் சந்தையில் இது 3வது மோசமான வீழ்ச்சி.
பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போதே கடும் சரிவு நிலவியது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தகத்தின் முடிவில் 1,624 புள்ளிகள் சரிவுடன் 25,741 என்ற குறியீட்டெண்ணுடன் இருந்தது.

தேசிய பங்குச்சந்தை நிப்டியும் வர்த்தக முடிவில் 491 புள்ளிகள் சரிவை கண்டது. இது முதலீட்டாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இன்றைய ஒரே நாளில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவாகும் இது.
அதேபோல் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 66 காசுகள் சரிந்து ரூ.66.50 எனும் நிலையை அடைந்தது. கடந்த சில வாரங்களாக சீனாவின் பணமான யுவான் மதிப்பு கடுமையாக சரிந்ததாலும், உலகளவில் டாலரின் மதிப்பு அதிகரித்திருப்பதும் ரூபாயின் மதிப்பில் கடும் சரிவை ஏற்படுத்தி உள்ளது
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications