ஐ.டி. ரிட்டர்ன் தாக்கல் செய்யும் போது வங்கி கணக்கு, வெளிநாட்டு பயண விவரங்களையும் கட்டாயம் தரவேண்டும்
டெல்லி: வருமான வரி செலுத்துவோர் தங்களது அனைத்து வங்கி கணக்குகளையும் வெளிநாட்டு பயண விவரங்களையும் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
வருமான வரி ஏய்ப்பு, கருப்பு பணம் பதுக்கலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2015 - 2016-ம் நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான புதிய விதிகளை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. புதிய விதிகள் விவரம்:

வருமானவரி செலுத்துவோர் வங்கி கணக்குகளின் எண்ணிக்கையை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கணக்கு வைத்துள்ள வங்கிகளின் பெயர்கள், ஐ.எப்.சி. குறியீடு, கடந்த நிதியாண்டின் (மார்ச் 31-ந் தேதி) இறுதியில் கணக்கில் உள்ள தொகை ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்.
ஜாயின்ட் அக்கவுண்ட் இருந்தால் அதன் விவரத்தையும் குறிப்பிட வேண்டும்.
வங்கி கணக்கு முடிக்கப்பட்டிருந்தாலும் அது குறித்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.
வெளிநாட்டு பயணங்கள் குறித்த விவரங்களையும் குறிப்பிட வேண்டியது அவசியம்.
அதாவது பாஸ்போர்ட் எண், பாஸ்போர்ட் கொடுக்கப்பட்ட இடம், சென்ற நாடுகள், எத்தனை முறை பயணம் மேற்கொள்ளப்பட்டது என்ற விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் படிவத்திலேயே ஆதார் எண் குறிப்பிட தனி பிரிவு ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications