ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. 3 பேர் பலி.. ஜம்மு காஷ்மீரில் சோகம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் சென்ற டிரக் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 3 பேர் பலியாகினர். மோசமான வானிலையால் இந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக ராணுவ அதிகாரிகள் கூறினர்.
ஜம்மு காஷ்மீரில் இன்று ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ராணுவ வீரர்கள் 3 பேர் பலியாகினர். ஜம்மு காஷ்மீரின் பந்திப்போராவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:-

ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள எஸ்.கே பேயன் என்ற பகுதியில் ராணுவ வீரர்கள் டிரக் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். பிற்பகல் 2.30 மணியளவில் இந்த டிரக் சாலையை விட்டு விலகி பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. மோசமான வானிலையால் சாலை சரியாக கண்ணுக்கு புலப்படாததால் இந்த விபத்து நேரிட்டுள்ளது.
விபத்தில் ராணுவ வாகனம் சிக்கிய தகவல் கிடைத்ததும் உடனடியாக மீட்பு பணி தொடங்கியது. உள்ளூர் மக்களுடன் சேர்ந்து மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. காயம் அடைந்த வீரர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில், 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்" என்றனர்.
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று வீரர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த மாதம் இதே போன்ற ஒரு விபத்து பூஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்றது. ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த டிரக் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
பூஞ்ச் செக்டாரில் உள்ள நிலைகளுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் தற்போது கடுமையான பனிப்பொழிவு காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலையால் சில அடி தூரமே சாலைகள் கண்ணுக்கு புலப்படுவதால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications