லட்டு பிரசாத ஆன்மிக விழாவில் சரிந்து விழுந்த மேடை.. 5 பேர் பலி - 50க்கும் மேலானவர்கள் காயம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஜெயின் சமூகத்தினர் நடத்திய விழாவில் மேடை சரிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகினர். 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் இன்று ஜெயின் சமூகத்தினர் சார்பில் ஆன்மிக விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரரான பகவான் ஆதிநாதரை போற்றும் வகையில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

Nirvana Laddu parv கொண்டாட்டம் என்பது நடந்தது. இதில் ஜெயின் சமூகத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் பங்கேற்றனர். லட்டு என்பது பிரசாதமாக வழங்கப்பட்டது.
அப்போது திடீரென்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மரத்தால் ஆன மேடை சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதுபற்றி அறிந்ததும், போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்றனர். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசல் ஏற்பட்டது.

இருப்பினும் ஒருவழியாக போலீசார், மீட்பு படையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி அறிந்தவுடன் காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். அதோடு காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக வேண்டும் என்று அவர் வேண்டி கொண்டார். பாக்பத் கலெக்டர் அஷ்மிதா லால் மற்றும் எஸ்பி அர்பித் விஜயவர்கியா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களை சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதுபற்றி கலெக்டர் அஷ்மிதா லால் கூறுகையில், ‛‛முதற்கட்ட விசாரணையில் மரத்தாலான மேடை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 40 பேர் வரை காயமடைந்துள்ளனர். அவர்களில் 20 பேர் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி உள்ளனர். இன்னும் 20 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் யாராவது காயமடைந்துள்ளனரா? என்பது பற்றி விசாரித்து வருகிறோம்'' என்றார். கலெக்டர் இப்படி கூறும் நிலையில் விழாவில் 50 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications