இரட்டை செயற்கைக்கோள்கள் உடன் வெற்றிகரமாக.. விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி59 ராக்கெட்! சாதித்த இஸ்ரோ
ஸ்ரீஹரிகோட்டா: நேற்று மாலை விண்ணில் ஏவப்பட இருந்த பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை 4.12 மணிக்கு பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்த இரட்டை செயற்கைக்கோள்களுடன் இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இஸ்ரோவின் ஒரு அங்கமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் மூலமாக வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வணிகரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், சூரியனின் ஒளிவட்டப் பாதையை ஆராய்வதற்காக ப்ரோபா-3, 'கரோனா கிராப்' எனும் இரட்டை செயற்கைக்கோள்களை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

'புரோபா-3' 'கரோனா கிராப்' செயற்கைக் கோள்கள் 550 கிலோ எடை கொண்டவை. சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்யும் வகையில் இந்த இணை செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த செயற்கைக்கோள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏவுதளமான, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேற்று மாலை 4 மணியளவில் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
ராக்கெட் ஏவப்படுவதற்காக எரிபொருட்கள் நிரப்பப்பட்டு, இறுதிக்கட்ட பணியான கவுன்ட்டவுன் 25 மணி நேரமாக நிர்ணயம் செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.08 மணிக்கு கவுன்ட்டவுன் தொடங்கியது. அதன்படி நேற்று மாலை 4.08 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாயும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று கடைசி நேரத்தில் மாலை 3 மணிக்கு மேல் திடீரென ராக்கெட் ஏவுதலை ஒத்திவைத்தது இஸ்ரோ.
பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் ஏவுதல் நாளை மாலை 4.12 மணிக்கு (அதாவது இன்றைக்கு) ஒத்திவைக்கப்படுவதாகவும், புரோபா 3 செயற்கைக் கோளில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் ஏவுதல் திட்டத்தை ஒத்திவைப்பதாகவும் இஸ்ரோ அறிவித்தது.
இந்நிலையில், இன்று மாலை 4.12 மணியளவில் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி59 ராக்கெட். இந்த ராக்கெட், 'புரோபா-3' 'கரோனா கிராப்' ஆகிய 2 செயற்கைகோள்களையும், முதலில் குறைந்தபட்சம் 600 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சம் 60 ஆயிரத்து 530 கிலோ மீட்டர் உயரமுள்ள நீள்வட்ட சுற்றுவட்ட பாதையிலும் நிலை நிறுத்தி, பின்னர் இணை சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தும்.
2 செயற்கைக்கோள்களும் 150 மீட்டர் இடைவெளியில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளிப் பகுதியை ஆய்வு செய்து தரவுகளை அனுப்பும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-59 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழவேற்காடு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications