நசுங்கிய உடல்.. இன்ஜின் - ரயில் பெட்டி இடையே சிக்கிய ரயில்வே ஊழியர்.. உயிரே போச்சு
பாட்னா: பீகார் மாநிலத்தில் லக்னோ - பரானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெட்டிகள் மற்றும் இன்ஜினை இணைக்கும் கப்ளிங்கை ரயில்வே ஊழியர் பிரித்து கொண்டிருந்தார். அப்போது முன்னோக்கி செல்வதற்கு பதில் பின்னோக்கி வந்த இன்ஜின் அவர் மீது மோதியது. இதனால் ரயில்வே பெட்டி மற்றும் இன்ஜின் இடையே சிக்கிய ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
ரயிலில் இன்ஜின் முதல் ஒவ்வொரு பெட்டிகளையும் இணைக்கும் வகையில் ‛கப்ளிங்' இருக்கும். இன்ஜின் மாற்றம், பெட்டிகள் மாற்றத்தின்போது இந்த ‛கப்ளிங்' பிரிக்கப்படும்.

இந்நிலையில் தான் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து பீகார் மாநிலம் பராணிக்கு லக்னோ - பராணி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 15204 ) புறப்பட்டது. இந்த ரயில் இன்று பீகார் மாநிலம் பெகுசாராய் மாவட்டத்தில் உள்ள பராணி ரயில் நிலையத்துக்கு வந்தது.
அப்போது அங்கு சமஸ்தீர்பூர் மாவட்டம் தால்சிங்சாராய் பகுதியை சேர்ந்த ரயில்வே ஊழியர் அருண் குமார் ராவத் (வயது 35) என்பவர் பணியில் இருந்தார். லக்னோ - பராணி ரயிலில் இருந்து கப்ளிங் பிரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டார். ரயிலில் பார்சல் பெட்டி மற்றும் இன்ஜினை இணைக்கும் வகையில் ‛கப்ளிங்கை' அவர் தயார் செய்தார்.
இந்த சமயத்தில் இன்ஜினை இயக்கிய டிரைவர் முன்னோக்கி செல்வதற்கு பதில் பின்னோக்கி இயக்கினார். அப்போது இன்ஜின் மற்றும் ரயில் பெட்டிக்கு இடையே பணி செய்த அருண் குமார் ராவத் மீது இன்ஜின் மோதியது. இதனால் அவர் ரயில் இன்ஜின் மற்றும் ரயில் பெட்டிக்கு இடையே சிக்கினார். அவரது உடல் நசுங்கியது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் கத்தினர். இந்த சத்தம் கேட்டதும், ரயில் இன்ஜினை விட்டுவிட்டு அதன் டிரைவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதுபற்றி அறிந்தவுடன் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அருண் குமார் ராவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் ரயில்வே ஸ்டேஷனில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி சோனப்பூர் டிஆர்எம் கூறுகையில், ‛‛இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதுபோன்ற சம்பவங்கள் பணி செய்யும் இடத்தில் நடக்க கூடாது. இதுதொடர்பாக அதிகாரிகள் மட்டத்திலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்படும்'' என்று கூறினார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications