தெலுங்கு மக்களை இழிவுபடுத்துவதா? நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்க பாஜக சுதாகர் ரெட்டி வலியுறுத்தல்
அமராவதி: தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி இழிவாக பேசியதற்கு பாஜக மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜகவின் மேலிடப் பொறுப்பாளரான சுதாகர் ரெட்டி இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு, தெலுங்கு பேசும் மக்களை இழிவுபடுத்தி பேசிய கருத்துகளை நடிகை கஸ்தூரி திரும்பப் பெற்று தெலுங்கு மொழி பேசும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் பிராமணர்கள் நேற்று பாதுகாப்பு வழங்க கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை கஸ்தூரி, தெரியாமத்தான் கேட்கிறேன்.. 300 வருஷம் முன்னாடி ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிரோ சேவைகள் செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்? என கேள்வி எழுப்பி இருந்தார்.

கஸ்தூரி பேச்சால் சர்ச்சை: நடிகையின் கஸ்தூரியின் இந்த பேச்சு மிகப் பெரும் சர்சையானது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஊடகங்களில் நடிகை கஸ்தூரியின் பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
கஸ்தூரி தொடர் விளக்கம்: இதனையடுத்து தாம் தெலுங்கு மொழி பேசும் மக்களை அப்படி பேசவில்லை; திமுக ஆதரவாளர்கள்தான் திரித்து பரப்புகின்றனர்; அத்தனையும் பொய்யாக பரப்புகின்றனர். எனக்கு தெலுங்கு மொழி பேசும் மக்கள் மீது அன்பும் மதிப்பும் உண்டு என அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து விளக்கம் அளித்து பதிவிட்டும் வருகிறார் நடிகை கஸ்தூரி.
சுதாகர் ரெட்டி கண்டனம்: இந்த பின்னணியில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா பாஜகவின் டெல்லி மேலிட இணை பொறுப்பாளரான சுதாகர் ரெட்டி சற்று முன்னர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நடிகை கஸ்தூரியின் இழிவான விமர்சனங்களுக்கு கடு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் நடிகை கஸ்தூரி தமது கருத்தை திரும்பப் பெற வேண்டும்; தமது கருத்துகளுக்காக நடிகை கஸ்தூரி தெலுங்கு மொழி பேசும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; அண்ணன் தம்பியாக பாசத்துடன் பழகிவரும் தமிழர்களுக்கும் தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கும் இடையேயான ஒற்றுமையை நடிகை கஸ்தூரியின் இத்தகைய பேச்சுகள் பாதிக்கும் என்றும் சுதாகர் ரெட்டி அந்த வீடியோவில் சுட்டிக்காட்டி உள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications