16,000 பேரை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பும் பிரபல நிறுவனம்.. கதறும் ஊழியர்கள்.. பின்னணி
சென்னை: பிரபல நிறுவனமாக செயல்பட்டு வரும் ‛நெஸ்லே'வில் அடுத்த 2 ஆண்டுகளில் 6 சதவீதம் பேரை அதாவது 16 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதனால் ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ‛நெஸ்லே' நிறுவனத்தின் இந்த திடீர் முடிவு குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
நெஸ்லே (Nestle).. உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் சார்பில் சாக்லேட்டுகள், பிஸ்கட்டுகள், தண்ணீர், குளிர்பானங்கள் உள்பட பல்வேறு உணவு பொருட்களை விற்பனை செய்கிறது.

இதுதவிர குழந்தைகள், நாய்களுக்குகான ஸ்பெஷல் உணவு பொருட்கள், புரோட்டீன் சார்ந்த உணவு பொருட்களை வெவ்வேறு பெயர்களில் விற்பனை செய்து வருகிறது.
இந்த ‛நெஸ்லே' நிறுவனம் ஸ்விட்சர்லாந்தின் வெவே நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஒவ்வொரு நாடுகளிலும் தனது தயாரிப்புகளை வெவ்வேறு பெயரில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் தான் ‛நெஸ்லே' நிறுவனம் அதிரடியாக 6 சதவீதம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அதாவது 16 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய ‛நெஸ்லே' முடிவு செய்துள்ளது. இதில் 4 ஆயிரம் பேர் தயாரிப்பு மற்றும் சப்ளை செயின் பிரிவில் பணியாற்றுவர்கள் என்றும், 12 ஆயிரம் பேர் ஒயிட் காலர் பிரிவில் பணியாற்றுபவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி நீக்க நடவடிக்கை அடுத்த 2 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
நிறுவனத்தின் செயல் திறனை அதிகரிப்பது, வருமான இழப்பை சரிசெய்வது உள்ளிட்டவற்றை இலக்காக கொண்டிருப்பதால் இந்த பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக நெஸ்லே நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நிறுவனத்தில் ஆட்டோமேஷன் வசதிகள் அதிகரிக்கப்பட உள்ளது. இதுபற்றி நெஸ்லே செய்தி தொடர்பாளர் ஃபார்ச்சூன் பத்திரிகையிடம் கூறுகையில், ‛‛எங்களின் இந்த முயற்சி பணி முறையை மாற்றும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது. நிறுவனத்தின் அமைப்பு, செயல்முறைகளை நெறிமுறைப்படுத்தி ஆட்டோமேஷன், டிஜிட்டல் மயமாக்குவதில் கவனம் செலுத்த உள்ளோம்'' என்று கூறியுள்ளார்.
இதனால் நெஸ்லே நிறுவன ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பணி நீக்க நடவடிக்கையில் வேலையை இழக்க வேண்டுமோ? என்ற அச்த்தில் ஊழியர்கள் உள்ளனர். மேலும் இந்த பணி நீக்க நடவடிக்கைக்கு இன்னொரு காரணமும் இருப்பதாக கூறப்படுகிறது. அது என்னவென்றால் நிறுவனத்தின் வருமானம் தான்.
அதாவது நெஸ்லேவின் வருமானம் சரிவை எதிர்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் வந்த வருமானத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு வருமானம் 1.9 சதவீதம் வரை குறைந்து 83.8 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. இந்த வருமான இழப்பும் பணி நீக்க நடவடிக்கைக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications