இந்தியாவுக்கு எமனாகும் அரபு நாடு? எங்களை இனி தாக்கினால் சவுதி அரேபியா வரும் - அறிவித்த பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: சவுதி அரேபியா - பாகிஸ்தான் இடையே கையெழுத்தான பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி இனி இந்தியா தாக்கும்போது பாகிஸ்தானுக்கு, சவுதி அரேபியா உதவுமா? என்ற கேள்விக்கு பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் பதிலளித்துள்ளார். ‛‛ஆம், கண்டிப்பாக.. இந்தியா எங்களை தாக்கினால் சவுதி அரேபியா உதவிக்கு வரும்'' என்று கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சவுதி அரேபியாவுக்கு சென்றார். சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகள் இடையே பரஸ்பர பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி பாகிஸ்தான் மீதான எந்தவொரு தாக்குதலும் சவுதி அரேபியா தன் மீதான தாக்குதலாக எடுத்து கொள்ளும். அதேபோல் சவுதி அரேபியா மீதான எந்தவொரு தாக்குதலையும், பாகிஸ்தான் தன் மீதான தாக்குதலாக எடுத்து கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி பாகிஸ்தான் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் சவுதி அரேபியா பதிலடி கொடுக்கும். சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும். அதேபோல் சவுதி அரேபியாவுக்கு தேவையான அணுஆயுதங்களையும் பாகிஸ்தான் வழங்கும். இந்த ஒப்பந்தம் தான் பேசும் பொருளாகி உள்ளது.
இதனால் பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு நாம் பதிலடி கொடுக்கும்போது சவுதி அரேபியா அந்த நாட்டுக்கு உதவும் என்று கூறப்படுகிறது. சவுதி அரேபியா நம்முடன் நல்ல நட்பில் உள்ளது. இதனால் சவுதி அரேபியா, நமக்கு எதிராக பாகிஸ்தானுக்கு உதவுமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பாகிஸ்தான் ராணுவ துறை அமைச்சர் கவாஜா ஆசிப் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஜியோ சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது கவஜா ஆசிப் கூறுகையில், ‛‛பாகிஸ்தானை இனி இந்தியா தாக்கினால் அந்த விவகாரத்தில் சவுதி அரேபியா தலையீடுமா? '' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛ஆம், கண்டிப்பாக.. இதில் எந்த சந்தேகமும் வேண்டும். இந்த ஒப்பந்தத்தின்படி சவுதி அரேபியா அல்லது பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் எங்களின் இருநாடுகளும் சேர்ந்து செயல்படுவோம்'' என்றார். பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப்பின் இந்த பேட்டி நம் நாட்டுக்கு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications