“இதை நிறைவேற்றிவிட்டு என்னை அடக்கம் பண்ணுங்க”.. கையில் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை!
நெல்லை: நெல்லை அருகே தந்தை கொலை செய்யப்பட்ட துக்கத்தை தாங்க முடியாத வேதனையில், கடிதம் எழுதி வைத்துவிட்டு, மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி வடக்கு நெல்லையப்பபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயியான இவர் கடந்த 17ஆம் தேதி மர்ம கும்ப கும்பலால் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்டு 5 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் காவல்துறையினர் கொலையாளிகளை கைது செய்யவில்லை. இதனால் அவரது உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆறுமுகத்தின் மகளான பேபி கனி (வயது 23), தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மன வேதனையில் இருந்துள்ளார். இதனால் இன்று காலை இளம்பெண் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் கொண்டு வந்தனர். அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
போலீசார் விசாரணை நடத்திய நிலையில், தற்கொலை செய்துகொண்டு இறந்த இளம்பெண் தனது தந்தை இறந்த காரணத்தினால் என்னால் இழப்பு தாங்க முடியவில்லை. எனது உறவினர் ஒருவர் தான் இதற்கு காரணமாக இருக்கும். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்திருப்பது தெரியவந்தது.
மேலும் தனது உள்ளங்கையிலும் எழுதி வைத்துள்ளார். அதில், இந்தக் கடிதத்தில் எழுதி இருப்பதை நிறைவேற்றிவிட்டு என்னை அடக்கம் செய்யுங்கள் என அந்த இளம்பெண் எழுதி உள்ளார். தந்தை இறந்த துக்கத்தில், தந்தையின் மரணத்திற்கு நீதி கிடைக்காத விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஆறுமுகத்தின் உறவினர்கள், ஊர்காரர்கள் அனைவரும் சேர்ந்து இந்த சம்பவத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி நெல்லை அரசு மருத்துவமனை முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பாளையங்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அரசு மருத்துவமனை முன்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications