பாரதி பக்கம்
மார்ச் 26, 2001
சுயசரிதை
பொருட் பெருமை
புலவர் தம்மொழி பொய்ம்மொழி யன்றுகாண்.
பொருளி லார்க்கின மில்லை துணியிலை,
பொழுதெ லாமிடர் வெள்ளம்வந் தெற்றுமால்.
பொருளி லார்பொருள் செய்தல் முதற்கடன்:
போற்றிக் காசிக்னுக் கேங்கி யுயிர்விடும்
மருளர் தம்மிசை யேபழி கூறுவன்:
மாமகட் கிங்கொர் ஊனமுரைத்திலன். (43)
அறமொன் றேதரும் மெய்யின்பம் என்றுநல்
லறிஞர் தம்மை அனுதினம் போற்றுவேன்.
பிறவி ரும்பி உலகினில் யான்பட்ட
பீழை எத்தனை கோடி! நினைக்கவும்
திறன ழிந்தென் மணமுடை வெய்துமால்
தேசத் துள்ள இளைஞர் அறிமினோ!
அறமொன் றேதரும் மெய்யின்பம் ஆதலால்
அதனை யேதுணை யென்றுகொண் டுய்திரால். (44)
வெய்ய தர்மப் பயன்களின் நொந்துதான்
மெய்யு ணர்த்திட லாகு மென்றாக்கிய
தெய்வ மேயிது நீதி யெனினும்நின்
திருவ ருட்குப் பொருந்திய தாகுமோ?
ஐய கோ! சிறி துண்மை விளங்குமுன்,
ஆவி நையத் துயருறல் வேண்டுமே!
பையப் பையவோர் ஆமைகுன் றேறல் போல்
பாருளோர் உண்மை கண்டிவ உய்வரால். (45)
தந்தை போயினன் பாழ்மிடி சூழ்ந்தது:
தரணிமீதினில் அஞ்சுலென் பாரிலர்:
சிந்தை .யில்தெளி வில்லை. உடலினில்
திறனு மில்லை: உரனுளத் தில்லையால்:
மத்தர் பாற்பொருள் போக்கிப் பயின்றதாம்
மடமைக் கல்வியால் மண்ணும் பயனிலை,
எந்த மார்க்கமும் தோற்றில தென்செய்கேன்?
ஏன்பி றந்தனன் இத்துயர் நாட்டிலே? (46)