For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
மார்ச் 27, 2001
முடிவுரை
உண்டு றங்கி இடர்செய்து செத்திடும்
கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
கனவி னுங்கன வாகும்: இதற்கு நான்
பலநி னைத்து வருந்தியிங் கென்பயன்?
பண்டு போனதை எண்ணி யென்னாவது?
சில தினங்கள் இருந்து மறைவதில்
சிந்தை செய்வதெவன் செத்திடு வானடா! (47)
ஞான முத்துற வும்பெற் றிலாதவர்
நானி லத்துத் துயரன்றிக் காண்கிலர்:
போன தற்கு வருந்திலன் மெய்த்தவப்
புலமை யோனது வானத் தொளிருமோர்
மீனை நாடி வளைத்திடத் தூண்டிலை
வீச லொக்கு மெனலை மறக்கிலேன்:
ஆன தாவ தனைத்தையுஞ் செய்ததோர்
அன்னை யே! இனி யேனும் அருள்வையால், (48)
வேறு
அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின்மீது தனியார சாணை,
பொழுதெலாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம், கரும் யோகத்தில்
நிலைத்திடல் என்றிவை யருளாய்
குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே! (49)
(தொடரும்)
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]