3 மணி நேரத்தில் 14 ஆபரேஷன்கள்-சர்ச்சையில் மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள்
மதுரை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மூன்று மணி நேரத்தில் 14 பேருக்கு மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆனால் இந்த சாதனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை அரசு மருத்துவமனையின் முதல்வர் எஸ்.எம். சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில்,
நாட்டில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேரில் 30 பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். குறிப்பாக மார்பக புற்றுநோய் அதிகரித்து வருகிறது.
இதற்கு பல்வேறு சிகிச்சை முறைகள் இருந்தாலும் அறுவைச் சிகிச்சை முறையே சிறந்தது. ஆனால் கதிர் இயக்க சிகிச்சை மார்பக புற்றுநோயை எளிதில் குணமாக்க உதவுகிறது.
கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி மதுரை அரசு மருத்துவமனை புற்றுநோய் அறுவை சிகிச்சைப் பிரிவு டாக்டர் மோகன் பிரசாத் தலைமையில் 14 டாக்டர்கள் கொண்ட குழுவினர் 3 மணிநேரத்தில் 14 பேருக்கு மார்பக புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர். இது ஒரு உலக சாதனையாகும் என்றார்.
கண்டனம் - சர்ச்சை...
ஆனால் இந்த அறுவைச் சிகிச்சைகளை சாதனைக்காக செய்தது தவறு. டாக்டர்கள் மக்களின் உயிரோடு விளையாடியுள்ளனர் என்று புகார் கிளம்பியுள்ளது.
குறைந்த நேரத்தில் ஆபரேஷனை செய்து இருப்பதால் அது தரமான ஆபரேஷனாக இருக்க முடியாது. இப்படி செய்தது மருத்துவ விதிமுறைகளை மீறிய செயலாகும் என்றும் பல்வேறு தரப்பில் இருந்து புகார் வந்துள்ளது.
விசாரணைக்கு உத்தரவு...
இது தொடர்பாக தமிழ் நாடு மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் வினாயகம் கூறும் போது, இது கண்டனத்துக்குரியது நாங்கள் இதற்கு அனுமதி வழங்கவில்லை. எனவே இது பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கிறோம் என்றார்.
மாநில சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் கூறுகையில், இந்த ஆபரேஷனுக்கு அனுமதியும் வழங்கவில்லை. இதை அங்கீகரிக்க எந்த குழுவையும் அனுப்பி வைக்கவில்லை. நோயாளிகளின் உயிர் தான் எங்களுக்கு முக்கியம். நோயாளிகளின் உயிர் விஷயத்தில் ஆபத்தோடு விளையாடியதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.
இதேபோல தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், அகில இந்திய மருத்துவ கவுன்சில்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் பிரகாசம் கூறும்போது, இந்த சாதனைக்காக டாக்டர்களுக்கு விருது கொடுக்கலாம். ஆனால் நோயாளிகளை இதற்கு பயன்படுத்தியது தவறு என்றார்.
சென்னை அரசு மருத்துவமனை புற்று நோய் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறும் போது, வேகமாக ஆபரேஷன் செய்தால் நாம் எதற்காக ஆபரேஷன் செய்கிறோமோ அது முழுமை பெறாது.
மார்பக புற்று நோய் அறுவை சிகிச்சையை பொறுத்தவரை சிறு ஆபரேஷன் என்றாலும் 1 மணி நேரம் ஆகும். சிக்கலான ஆபரேஷன் என்றால் 3 மணி நேரம் கூட ஆகும். குறுகிய நேரத்தில் இத்தனை ஆபரேஷன் செய்ததால் இது சரியாக அமைந்திருக்குமா என்ற கேள்வி எழுகிறது என்றார்.
விழிப்புணர்வுக்காக செய்தார்களாம்...
ஆனால் சாதனைக்காக இவ்வாறு செய்யவில்லை என்று மதுரை டாக்டர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை டாக்டர் மோகன்பிரசாத் கூறுகையில், மதுரை அரசு மருத்துவமனையில், ஆபரேஷன் செய்ய வேண்டிய அதிக நோயாளிகள் இருந்தனர். ஒரு நாளைக்கு 4 ஆபரேஷன் வரை செய்வோம். நான் 15 நாட்கள் விடுமுறையில் சென்று இருந்தேன். இதனால் கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே தான் ஒரே நேரத்தில் 14 பேருக்கு ஆபரேஷன் செய்தோம்.
மேலும் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த அறுவை சிகிச்சைகளைகளை செய்தோம் என்று கூறியுள்ளார்.
அதே போல இது கின்னஸ் சாதனைக்காக செய்யப்படவில்லை என்று நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் கூறியுள்ளார்.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications