தமிழக கடலோரப் பகுதிகள் 2012ல் அழியும்- ஸ்ரீ மகாசூரிய தேஜஸ்வி சுவாமி
கன்னியாகுமரி: வரும் 2012ம் ஆண்டு கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான கடலோர பகுதிகள் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஸ்ரீமாகசூரிய தேஜஸ்வி சுவாமிகள் கூறினர்.
இந்த சுவாமிகள், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் கட்டப்பனா என்ர இடத்தைச் சேர்ந்தவர். இவர் நதிகளையும், மரங்களையும் பாதுகாக்க வேண்டி கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து ரத யாத்திரை தொடங்கி இந்தியாவின் பல்வேறு புண்ணிய நகரங்கள் வழியாக சுமார் 17 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மீண்டும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் புண்ணிய நதிகளின் புனித நீரை முக்கடல் சங்கமத்தில் ஊற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
இந்த நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இதையொட்டி, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்தராவில் நிருபர்களிடம் ஸ்ரீமகாசூரிய தேஜஸ்வி சுவாமிகள் பேசுகையில்,
பூமியில் உயிருடன் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் தந்தையாகவும், சக்தி களஞ்சியமாகவும் விளங்கும் சூரியனை உதயத்தின் போது இருபது நிமிடம் தரிசனம் செய்தலே போதும். உணவு தேவையில்லை. நீரும் தேவையில்லை என்ற உண்மையை சூரிய யோகத்தின் மூலம் மக்களுக்கு உணர்த்தி வருகிறேன். இன்றைய நவீன உலகில் இயற்கையை யாரும் மதிப்பதில்லை.
கோபத்தில் பூமி அன்னை...
நதிகளையும், மரங்களையும், பூமியையும் அழிக்கின்றனர். இதனால் பூமி அன்னை கோபம் கொண்டுள்ளாள்.
அதனால்தான் கடந்த காலங்களில் இயற்கை பேரழிவுகள் அதிகரித்து வருகிறது. சுனாமி, வெள்ளம், பூகம்பம் போன்றவைகளும் அதிகரித்து வருகின்றன.
வரும் 2012ம் ஆண்டில் கன்னியாகுமரி, கொச்சி, சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகள் மிகபெரிய இயற்கை பேரழிவுகளை சந்திக்கும்.
தற்போது இந்தியாவின் கங்கை, யமுனை, கிருஷ்ணா,சபர்மதி, பிரம்மபுத்திரா, நர்மதா, கோதாவரி, சட்லஜ், பியாஸ் உள்ளிட்ட 112 நதிகள் உள்ளன. இந்த நதியில் இருந்து புனித நீர் சேகரிக்கப்பட்டு இங்கு (கன்னியாகுமரி முக்கடல்) ஊற்றப்படுகிறது.
பின்னர் இங்கிருந்து சேகரிக்கப்படும் புனித நீர் வரும் டிசம்பர் 31ம் தேதி ஹிமாலயாவில் ஊற்றப்படும் என்றார் சுவாமிகள்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications