17ல் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
உடன்குடி: குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வரும் 17-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
உடன்குடி அருகே உள்ள குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வரும் 17-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கணபதி வழிபாடு, விநாயகர் வேள்வி, தீபாராதனையும், செல்வ வழிபாடு, குபேர லட்சுமி வேள்வி, பிரசாதம் வழங்குதல் நிகழ்சசியும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 5 மணிக்கு யானை மீது தீர்த்தம் எடுத்து வருதல், முளைப்பாரி இடுதல், முதல்கால வேள்வி பூஜை, ஒளி வழிபாடும், மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவும், இரவு 8 மணிக்கு பரதநாட்டியமும் நடந்தது. இன்று இரண்டாம் கால வேள்விகூடு பூஜைகள், பிரசாதம் வழங்குதல், பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது.
நாளை (16ம் தேதி) காலை 8 மணிக்கு சிறப்பு குரு தூய்மை, நான்காம் கால வேள்வி கூடு பூஜைகள், வேதிகா அர்ச்சனை, திருமறைகள் ஓதுதல், நிறை அலி அளித்தல், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து 17-ம் தேதி காலை 11 மணி முதல் 12 மணிக்குள் மூலஸ்தான விமானம், சாலை கோபுர விமானம், முத்தாரம்மன் ஞானமூர்த்தீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு திருகுடமுழுக்கு நீராட்டு விழாவும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், பிற்பகல் 3 மணிக்கு மூலவருக்கு சிறப்பு நந்நீராட்டு, சிறப்பு அலங்காரம், பூஜை பிரசாதம் வழங்குதலும், மாலை 4 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8.30 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், இரவு 9 மணிக்கு அம்பாள் வீதியுலாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.