For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முழங்கால் தாண்டிடும் சேற்றில்தான் நடவு..!!

மழையை எளிய கிராம வாசிகள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது குறித்த கவிதைத்தொகுப்பு.

Google Oneindia Tamil News

சென்னை: மழையை எளிய கிராம வாசிகள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது குறித்த கவிதைத்தொகுப்பை வாசகர் ஒருவர் எழுதியுள்ளார்.

சிங்கப்பூரைச் சேர்ந்தவர் க.தங்கமணி. ஒன் இந்தியா வாசகரான இவர் மழை கிராம மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கவிதை வடிவில் எழுதியுள்ளார். இதோ அந்தங்க கவிதை உங்களுக்காக..

One india tamil reader Thangamani has written a poem on rain

முழங்கால் தாண்டிடும்
சேற்றில்தான் நடவு

தொடையை கிழிக்கும்
பயிர்க்கிடையில்தான்
களையெடுப்பு

நாள்முழுதும்
நனைந்தபடியேதான்
நாற்றடிப்பு

நெஞ்சைத்தொடும் நீருள்ள
வாய்க்காலைத் தாண்டிதான்
வயல்வெளி வேலை

பாலமற்ற ஆற்றிடை நீரை
நீந்திதான் கடக்கிறோம்

வீதியில் மட்டுமல்ல
எங்களின் வீட்டிற்குள்ளும்
மழை பெய்யும்
வெள்ளம் வரும்
சேதமடையும்
ஆனால்
செய்தியாகாது

அதீத பயம்
அற்றவர்கள் நாங்கள்
நிற்போம்
நீந்துவோம்
ஓடுவோம்
உழைப்போம்

அனலும் புனலும்
எங்களுக்கு
அன்றாட வாழ்க்கை

English summary
A one india tamil reader Thangamani has written a poem on rain. How the villagers facing rain when citi people afraid of rain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X