Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முழங்கால் தாண்டிடும் சேற்றில்தான் நடவு..!!

மழையை எளிய கிராம வாசிகள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது குறித்த கவிதைத்தொகுப்பு.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழையை எளிய கிராம வாசிகள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது குறித்த கவிதைத்தொகுப்பை வாசகர் ஒருவர் எழுதியுள்ளார்.

சிங்கப்பூரைச் சேர்ந்தவர் க.தங்கமணி. ஒன் இந்தியா வாசகரான இவர் மழை கிராம மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கவிதை வடிவில் எழுதியுள்ளார். இதோ அந்தங்க கவிதை உங்களுக்காக..

One india tamil reader Thangamani has written a poem on rain

முழங்கால் தாண்டிடும்
சேற்றில்தான் நடவு

தொடையை கிழிக்கும்
பயிர்க்கிடையில்தான்
களையெடுப்பு

நாள்முழுதும்
நனைந்தபடியேதான்
நாற்றடிப்பு

நெஞ்சைத்தொடும் நீருள்ள
வாய்க்காலைத் தாண்டிதான்
வயல்வெளி வேலை

பாலமற்ற ஆற்றிடை நீரை
நீந்திதான் கடக்கிறோம்

வீதியில் மட்டுமல்ல
எங்களின் வீட்டிற்குள்ளும்
மழை பெய்யும்
வெள்ளம் வரும்
சேதமடையும்
ஆனால்
செய்தியாகாது

அதீத பயம்
அற்றவர்கள் நாங்கள்
நிற்போம்
நீந்துவோம்
ஓடுவோம்
உழைப்போம்

அனலும் புனலும்
எங்களுக்கு
அன்றாட வாழ்க்கை

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+