முண்டாசுக் கவிஞன் பாரதி .. பார் போற்றும் மகாகவி!
எட்டயபுர மண்ணிலே பிறந்த தமிழ்மகன்
எழுச்சி மிக்க கவிதைகளாலே சுதந்திர வேட்கையை ஊட்டிய தியாகி
எங்கெங்கு காணிணும் சக்தியடா என்று தமிழ்த்தாயைப் போற்றியவன்
அஞ்சாநெஞ்சமுடையவன்
கண்ணன் பாட்டு குயில் பாட்டு எழுதியவன்
காவிரி தென்பெண்ணை பாலாறு தினம் கண்டதோர் வைகை என
ஆறுகளின் புகழ் பாடியவன்
சாதிகள் இல்லையடி பாப்பா என அன்றே சாதிகளை அடியோடு அழித்தவர்
சுதந்திரமே உன் மூச்சு

சாதிக்கத் தூண்டுமே உன் பேச்சு
வீரத்தையும் தீரத்தையும்
தமிழ்மண்ணில் விதைத்த தலைவன்
தாய்நாடே எனது குடும்பம் என வாழ்ந்தவன்
ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என உழைப்பின் மகத்துவத்தையும்
கூடி வாழுதலின் நன்மையையும்
ஆங்கிலயரைக் கண்டு அஞ்சாதவன்.
பேனா முனையின் சக்தியை உலகறியச் செய்தவன்
பத்திரிகையாளனாய் கவிஞனாய் சுதந்திர போராட்ட தியாகியாய் பன்முகம் கொண்டவன்
பாடல்களால் மக்கள் மனதைக் கொள்ளை கொண்டவன்
பாரதம் போற்றும் பாடல்களைப் பாடியவன்
முண்டாசுக்கவிஞன் பாரதி
பார் போற்றும் மகாகவி
நீ இல்லாவிட்டாலும் இவ்வுலகில் எக்காலத்துக்கும் உம் கவிதைகள் வாழும்.
- ஜி. உமா












Click it and Unblock the Notifications