மார்கழி திருவாதிரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தனுர் மாத பூஜை - 19ல் ஆருத்ரா தரிசனம்
மார்கழி மாத திருவாதிரை தினமான 19ஆம் தேதி நள்ளிரவு முதல் 20ஆம்தேதி அதிகாலை வரை நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 11ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மாணிக்கவாசகர் திருவெண்பா உற்சவம் நடைபெறுகிறது. தனுர் மாத திருவிழாவையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 16ஆம்தேதி முதல் ஜனவரி மாதம் 13ஆம் தேதி வரை திருஞானசம்பந்தர் சன்னதி முன்பாக பக்தர்களுக்கு ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி நடக்கும்.

இந்த நாட்களில் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு உச்சிக்கால பூஜை முடிந்து, பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு பல்லாக்கு புறப்பாடாகி பூஜைகள் நடக்கும். இவை முடிந்த பின் 9 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.
வரும் 11ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை எண்ணெய் காப்பு உற்சவம் நடக்கிறது. மேற்கண்ட நாட்களில் மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவில் உற்சவர் சன்னதியில் தைலக்காப்பு மற்றும் தீபாராதனை முடிந்த பின் சுவாமி-அம்பாள் 4 ஆடி வீதிகளில் வலம் வருவார்கள்.
18ஆம் தேதி கோ ரதத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி ஆடி வீதிகளில் புறப்பாடாவார். 19ஆம் தேதி கனக தண்டியலில் அம்மன் எழுந்தருள்கிறார். 20ஆம் தேதி திருவாதிரை அன்று பொன்னூஞ்சல் மண்டபத்தில் இருந்து சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் மர சிம்மாசனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வருகிறர்கள்.
11ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மாணிக்க வாசகர் 100 கால் மண்டபம் நடராஜர் சன்னதி முன்பு உள்ள சவுக்கையில் எழுந்தருள்கிறார். அங்கு திருவெண்பா பாடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 4 ஆடி வீதிகளில் வலம் வருகிறார்.
மார்கழி மாத திருவாதிரை தினமான 19ஆம் தேதி நள்ளிரவு முதல் 20ஆம்தேதி அதிகாலை வரை நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய பால், தயிர், இளநீர், நெய், மஞ்சள் பொடி, திரவியப்பொடி, எண்ணெய் மற்றும் இதர பொருட்களை 19ஆம் தேதி மாலை 7 மணிக்குள் கோவில் உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications