திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஏகாந்தமாக பஞ்சமி தீர்த்தம் - வியாழக்கிழமை புஷ்ப யாகம்
பத்மாவதி தாயார் கோவிலில் புதன்கிழமை காலை 11.52 மணிக்கு பஞ்சமி தீர்த்தம் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது.
திருப்பதி : திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. நிறைவு நாளான புதன்கிழமை காலை 11.52 மணிக்கு பஞ்சமி தீர்த்தம் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது.
திருப்பதி அருகில் உள்ள ஊர் திருச்சானூர். தாயார் அலர்மேல்மங்கை என்றும் பத்மாவதி தாயார் என்றும் வணங்கப்படுகிறார். தினமும் இரவில் திருமலையிலிருந்து திருவேங்கடவன் இறங்கி வந்து அலர்மேல் மங்கைத் தாயாருடன் ஏகாந்தமாக இருந்து விட்டு பின் விடிவதற்குள் திருமலைக்குச் செல்வதாக ஐதீகம்.
கார்த்திகை மாத பஞ்சமி நாளில் திருச்சானூர் திருக்குளத்தில் பத்மாவதி தாயார் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் அவதரித்தார் என்கிறது புரண கதை. பத்மாவதி தாயாரின் அவதார தினத்தை கொண்டாடும் விதமாக ஆண்டு தோறும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை மாத பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. கொரோனா பரவல் தடுக்கும் விதத்தில் தாயாரின் திருவீதி உலா முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பத்மாவதி தாயார்
கடந்த 1ஆம் தேதி காலை பெரிய சேஷ வாகனம், இரவு ஹம்ச வாகனம், 2ஆம் தேதி இரவு முத்துப்பந்தல் வாகனங்களில் பத்மாவதி தாயார் அலங்காரமாக எழுந்தருளினார். அன்றைய தினம் இரவு சிம்ம வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

அலங்காரமாக அன்னை
கடந்த 3ஆம் தேதி காலை கல்ப விருட்ச வாகனம், இரவு ஹனுமந்த வாகனம் 4ஆம் தேதி காலை கோஜ பல்லக்கு உற்சவம், இரவு ஹனுமந்த வாகனத்தில் எழுந்தருளினார். இரவு பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. 5ஆம் தேதியன்று காலை சர்வபூபால வாகனசேவையும் மாலையில் தங்கத்தேருக்கு பதிலாக சர்வபூபால வாகன சேவையும், இரவில் கருட வாகன சேவையும் நடைபெற்றது.

அம்மன் அவதார நாள்
6ஆம் தேதி சூரிய பிரபை வாகன சேவையும் இரவு சந்திர பிரபை வாகன சேவையும் நடைபெற்றது. 7ஆம் தேதி தேருக்கு பதிலாக சர்வ பூபால வாகன சேவை, 8ஆம் தேதி குதிரை வாகன சேவையும் நடைபெற உள்ளது. நிறைவு நாளான புதன்கிழமை காலை 11.52 மணிக்கு பஞ்சமி தீர்த்தம் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது. கோவிலில் உள்ள வாகன மண்டபத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சிறிய புஷ்கரணியில் பஞ்சமி தீர்த்தம் நடக்கிறது.

அம்மனுக்கு யாகம்
நாளை மறுநாள் வியாழக்கிழமை மாலை 4 மணியில் இருந்து இரவு 7 மணி வரை புஷ்ப யாகம் நடக்கிறது. முன்னதாக கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது, என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மங்கல சீர் வரிசை
பத்மாவதி தாயாரின் அவதார தினத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் கார்த்திகை பஞ்சமி நாளில் திருமலை ஏழுமலையான் கோவிலில் இருந்து பட்டுச்சேலை, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் சீர்வரிசையாக எடுத்து வரப்பட்டு பத்மாவதி தாயாருக்கு அன்பளிப்பாக அளிக்கப்படும்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications