2 வயது குழந்தைக்கு கூட தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை! அதிகரித்த குற்றங்கள்! திமுக நிர்வாகி கொடூரம்
சென்னை: "வளர்ந்த மாநிலம்", 'அமைதிப் பூங்கா' என்றெல்லாம் அழைக்கப்படும் தமிழகத்தில், இன்று பிஞ்சு குழந்தைகளின் பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாகி நிற்கிறது. சமீபத்தில் கிருஷ்ணகிரியில் அரங்கேறிய அந்த 'பயங்கரம்' ஒட்டுமொத்த தமிழகத்தின் மனசாட்சியையும் உலுக்கியெடுத்துள்ளது. திமுக அரசு சட்ட ஒழுங்கில் மோசமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் வைக்கும் புகார்களை உறுதி செய்யும் விதமாக இந்த சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

கிருஷ்ணகிரி: போலி முகாமும்... புதைக்கப்பட்ட நீதியும்!
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஒரு தனியார் பள்ளியில் நடந்த அந்த 'போலி என்.சி.சி (NCC) முகாம்' சாதாரணமான ஒன்றல்ல. வெறும் பயிற்சியாளர் என்ற போர்வையில் நுழைந்த சிவராமன் என்பவர், பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தபோது தமிழகமே அதிர்ந்தது. இதில் கொடுமை என்னவென்றால், தவறு நடப்பது தெரிந்தும் அந்தப் பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்கள், புகார் அளிக்காமல் மறைக்க முயன்றதுதான்.
தற்போது அந்தச் சிவராமன் சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்துவிட்டார். ஆனால், அந்தப் பிஞ்சுகளின் மனதில் விழுந்த வடு மாறுமா?
அஞ்செட்டி: இரண்டரை வயதுக் குழந்தையின் துயர மரணம்
இன்னொரு பக்கம், கிருஷ்ணகிரி அஞ்செட்டி அருகே இரண்டரை வயதுக் குழந்தை பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சம்பவம் மனசாட்சியுள்ள எவரையும் உறங்க விடாது. வலிப்பு வந்து குழந்தை இறந்துவிட்டதாகத் தாய் நாடகமாடிய நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கைதான் அந்தப் பிஞ்சு உடலில் நிகழ்த்தப்பட்ட கொடூரத்தை அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டியது. தாயுடன் பழகி வந்த பெரியநாயகம் என்ற 40 வயது நபர்.. திமுக இளைஞரணி கிளைச் செயலாளர் பெரியநாயகம் அந்தச் சின்னஞ்சிறு குழந்தையைச் சிதைத்துக் கொன்றது அம்பலமாகியுள்ளது. திமுக இளைஞரணி கிளைச் செயலாளர் பெரியநாயகம் இந்த வழக்கில் கைதாகி உள்ளார். பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டிய தாயின் அருகிலேயே ஒரு குழந்தை வேட்டையாடப்பட்டது சமூகச் சீரழிவின் உச்சம். அதும் ஒரு ஆளும் கட்சி நிர்வாகியால்!
இது ஒரு தனிப்பட்ட குற்றவாளியின் செயல் மட்டும்தானா அல்லது தமிழக அரசின், சட்ட ஒழுங்கின் தோல்வியா?
புள்ளிவிவரங்கள் சொல்லும் அதிர்ச்சி: எகிறும் போக்சோ (POCSO) வழக்குகள்!
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எந்தளவுக்கு அதிகரித்துள்ளன என்பதை இந்த அரசுப் புள்ளிவிவரங்களே அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டுகின்றன:
2020: 3,090 வழக்குகள்
2021: 4,465 வழக்குகள்
2022: 6,580 வழக்குகள்
2023: 6,968 வழக்குகள்
மூன்றே ஆண்டுகளில் சுமார் 61% உயர்வு என்பது சாதாரணமானதல்ல. 'விழிப்புணர்வு பெருகிவிட்டதால் தான் வழக்குகள் அதிகமாகப் பதிவாகின்றன' என்று அரசுத் தரப்பில் சமாதானம் சொன்னாலும், நிதர்சனத்தில் குழந்தைகள் மீதான குற்றச்செயல்கள் குறையவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
அதிகார நிழலில் குற்றவாளிகள்? - தி.மு.க.வினரின் தலையீடு!
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஆளுங்கட்சியினரின் பெயர்கள் அடிபடுவதுதான் வேலியே பயிரை மேயும் கதையாக இருக்கிறது.
கிருஷ்ணகிரி விவகாரம்: இந்த விவகாரத்தில் கைதான முக்கியப் புள்ளிகள் மற்றும் அவர்களுக்குத் துணையாக நின்றவர்கள் உள்ளூர் தி.மு.க புள்ளிகளுடன் நெருக்கத்தில் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
விழுப்புரம் & திருச்சி: சமீபத்தில் விழுப்புரத்தில் பெண் ஒருவரை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஒரு தி.மு.க நிர்வாகி கைது செய்யப்பட்டார். அதேபோல் திருச்சியிலும் ஒரு சிறுமிக்கு நேர்ந்த கொடுமையில் கட்சிப் பொறுப்பில் இருப்பவர்களின் தலையீடு இருந்ததாகப் புகார்கள் பறக்கின்றன.
கட்சித் தலைமை "யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சொன்னாலும், களத்தில் உள்ள காவல் துறையினரோ, "ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் சம்பந்தப்படும்போது சட்டத்தின் கைகள் கட்டப்படுகின்றன" என்று ரகசியமாகப் புலம்புகிறார்கள்.
கேள்விக்குறியாகும் பாதுகாப்பு!
போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரிப்பு, ஆன்லைன் சீரழிவுகள் ஒருபுறமிருக்க, அரசியல் பலம் கொண்டவர்கள் குற்றங்களில் ஈடுபடும்போது தப்பித்துவிடுவார்கள் என்ற எண்ணம் குற்றவாளிகளுக்குத் துணிச்சலைத் தருகிறது. தமிழகத்தின் 'திராவிட மாடல்' ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உண்மையான பாதுகாப்பு எப்போது கிடைக்கும் என்பதே சாமானிய மக்களின் தற்போதைய ஒற்றைக் கேள்வி.
-
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி












Click it and Unblock the Notifications