குதிரையை பின்னாடி கட்டி வண்டியை இழுக்கும் மத்திய பாஜக அரசு- காஷ்மீர் விவகாரத்தில் ப.சிதம்பரம் பொளேர்
சென்னை: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் குதிரையை பின்னாடி கட்டி வண்டியை இழுக்க நினைக்கிறது மத்திய பாஜக அரசு என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் சாடியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டன.
ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலைத் தவிர வேறு எந்த அரசியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 2 ஆண்டுகளாக நிர்வாகத்தை துணை நிலை ஆளுநர்தான் கவனித்து வருகிறார்.

மோடி ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் அரசியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டத்தை பிரதமர் நேற்று தமது இல்லத்தில் நடத்தினார் இதில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் குலாம்நபி ஆசாத், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா (ஒமர் அப்துல்லா), மெகபூபா முப்தி உள்ளிட்ட 14 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

மீண்டும் மாநில அந்தஸ்து
இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காஷ்மீரில் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார். அதேநேரத்தில் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்; சிறையில் உள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

தேர்தலுக்கு முன்னுரிமை
மத்திய அரசைப் பொறுத்தவரையில் ஜம்மு காஷ்மீரில் முதலில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. ஆனால் ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் இதனை கடுமையாக எதிர்க்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

ப. சிதம்பரம் அட்டாக்
ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில், காங்கிரஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் மாநில அந்தஸ்தை முதலில் வழங்குங்கள்; பின்னர் தேர்தலை நடத்டலாம் என்கின்றனர். மத்திய அரசோ முதலில் தேர்தலை நடத்துவோம்; பின்னர் மாநில அந்தஸ்து வழங்குவோம் என்கிறது. அதாவது குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டும்; குதிரையை பின்னாடி கட்டிவிட்டு வண்டியை இழுக்க நினைக்கிறது மத்திய அரசு; இது விசித்திரமானது.. ஒரு மாநிலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்; அந்த தேர்தல் நியாயமானதாகவும் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications