ஜெ. நினைவிடத்தில் பட்ஜெட் உரையை வைத்து அஞ்சலி செலுத்தினார் அமைச்சர் ஜெயகுமார்
ஜெயலலிதா நினைவிடத்தில் நிதியமைச்சர் ஜெயகுமார் நிதிநிலை அறிக்கையை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதையொட்டி ஜெயலலிதா நினைவிடத்தில் நிதியமைச்சர் ஜெயகுமார் நிதிநிலை அறிக்கையை வைத்து அஞ்சலி செலுத்தினார். சாமானிய மற்றும் ஏழை மக்களின் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இன்று முதல் முறையாக தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வது அமைச்சர் ஜெயகுமாருக்கும் இதுவே முதல் முறையாகும்.

இதைத்தொடர்ந்து சட்டசபைக்கும் செல்லும் முன் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்ற அமைச்சர் ஜெயகுமார் அங்கு பட்ஜெட் உரையை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நிதிநிலை அறிக்கையை ஜெ நினைவிடத்தில் வைத்து ஆசி பெற்றதாக கூறினார்.
தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உருவாக்க முன்னோடி திட்டங்களை கொண்டுவந்தவர் ஜெயலலிதா என அமைச்சர் ஜெயகுமார் கூறினார். மக்களுக்கான வளர்ச்சித்திட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
ஜெயலலிதா வழியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் சாமானிய மற்றும் ஏழை மக்களின் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றார். ஜெயலலிதாவின் பொன்மொழியின்படி எவ்வளவு நிதிப்பற்றாக்குறை இருந்தாலும் ஏழை எளிய மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை ஏற்படாது என்றும் அவர் கூறினார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications