நடுராத்திரி டாப் நடிகையுடன் ஒன்றாக பைக்கில் சுற்றிய ரஜினிகாந்த்.. சுற்றி வளைத்த மைத்துனர்! நடிகை ஓபன்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து நடிகர்கள், நடிகைகள் பலரும் தங்களது அனுபவங்களை பேட்டிகளில் பகிர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில், நடிகை ராதிகா சரத்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில், ரஜினியுடன் இணைந்து நடித்த காலத்தில் ஏற்பட்ட சில மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
ராதிகா அந்த பேட்டியில், "பலரும் ரஜினிகாந்தை 'ரஜினி சார்' என்று அழைப்பார்கள். ஆனால் நான் அவரை எப்போதும் 'ரஜினி' என்றுதான் கூப்பிடுவேன். அது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அந்த அளவுக்கு நாங்கள் நட்புடன் பழகியிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

பைக்கில் சென்னையை சுற்றிய நினைவு
தொடர்ந்து பேசிய ராதிகா, ரஜினியுடன் இணைந்து நடித்த ஆரம்ப காலங்களில் நடந்த ஒரு சம்பவத்தை கூறி இருக்கிறார். ராதிகாவும் ரஜினியும் அடிக்கடி சுற்றி இருக்கிறார்களாம் ஒருமுறை, இரவு நேரத்தில் ஷூட்டிங் முடிந்த பிறகு, ரஜினியின் பைக்கில் அவருடன் சேர்ந்து சென்னை நகரத்தை சுற்றிக்கொண்டிருந்தார்களாம்.
அப்போது ரஜினி, "இந்த இடத்தில் நான் ஒருகாலத்தில் படுத்து தூங்கியிருக்கிறேன். இந்த இடத்தில் தங்கி இருந்தேன். இங்கே தான் சாப்பிட்டேன்" என தன் ஆரம்ப கால வாழ்க்கை பற்றிய பல நினைவுகளை பகிர்ந்ததாக ராதிகா தெரிவித்தார்.
"ரஜினி இன்று இருக்கும் இடத்திற்கு வருவதற்கு முன் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது எனக்கு அந்த நேரத்தில் தான் நன்றாக புரிந்தது. பலரின் வாழ்க்கை போராட்டங்களை கேட்டிருப்போம். ஆனால் ரஜினி அதை நேரடியாக அனுபவித்தவர்" என்றும் அவர் கூறினார்.
காரில் வந்த லதாவின் சகோதரர்
அந்த இரவு பைக்கில் இருவரும் சென்னையை சுற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு கார் வேகமாக வந்து அவர்கள் முன்னால் நின்றதாகவும், அதை பார்த்ததும் தான் மிகவும் பதறியதாகவும் ராதிகா கூறினார்.
பின்னர் அருகில் வந்தவர் யார் என்று பார்த்தபோது, அது ரஜினியின் மனைவி லதாவின் சகோதரர் என்பதும், அவர் தான் இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தை என்பதும் தெரிய வந்ததாக கூறினார்.
"நடுராத்திரியில் ரஜினி ஒரு பெண்ணுடன் பைக்கில் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தில் அவர் காரை வேகமாக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். ஆனால் நாங்கள் இருவரும் சேர்ந்து வருவது லதாவுக்கு முன்பே தெரியும் என்று ரஜினி விளக்கிய பிறகே அவருக்கு நிம்மதி ஏற்பட்டது" என்று ராதிகா அந்த சம்பவத்தை நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார்.
ரஜினிகாந்தின் இரண்டு முகங்கள் - ராதிகா
அதே பேட்டியில், ரஜினியின் கேரக்டர் குறித்து பேசிய ராதிகா, "ஒரே மனிதருக்குள் இரண்டு விதமான முகங்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு பக்கம் மிக எளிமையான மனிதர். இன்னொரு பக்கம் தன் தொழிலில் மிகவும் ஒழுங்காகவும், பொறுப்புடன் இருப்பவர். அந்த இரண்டுமே ரஜினியிடம் மிகத் தெளிவாக தெரியும்" என்று கூறினார்.
ராதிகா மேலும் ரஜினி பற்றி பேசும் போது, படப்பிடிப்பில் சரியாக சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துவிடுவார் என்றும், புதிய நடிகர்களிடம் கூட மரியாதையுடன் நடந்து கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களிடம் வைரலாகும் பேட்டி
ராதிகா பகிர்ந்த இந்த நினைவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்தின் எளிமையான வாழ்க்கை, ஆரம்ப கால போராட்டம் மற்றும் சக நடிகைகளுடன் கொண்ட நட்பு ஆகியவை மீண்டும் ரசிகர்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதன் மூலம், சூப்பர் ஸ்டார் என்ற உயர்ந்த நிலையை அடைந்த பிறகும், ரஜினிகாந்த் தனது பழைய நாட்களை மறக்காமல் நினைவுகூரும் மனிதராக இருப்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
அறந்தாங்கி நிஷா ஓபனாக சொன்ன ஒரு வார்த்தை.. அறிவே இல்லையா இப்படியா பேசுறது? மேடையிலேயே திட்டிய நடிகர் -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
Happy Raj OTT: ஓடிடிக்கு வரும் ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்... எந்த தளத்தில், எப்போ பார்க்கலாம்? லீக்கான தகவல் -
நடிகர் பிரகாஷ் ராஜின் அம்மா திடீர் இறப்பு.. இவ்வளவு பெரிய சோகங்களை கடந்து வந்தவரா அவர்! நெகிழ வைத்த கதை -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications