50 ஆண்டுகளாக தமிழ் எழுத்துலகில் க்ரைம் கதை மன்னனாகத் திகழ்பவர் ராஜேஷ்குமார். ராஜேஷ்குமார் எழுதிய முதல் நாவல் வாடகைக்கு ஒரு உயிர் 1980-ல் மாலைமதியில் வெளியானது. அவர் எழுதிய முதல் தொடர் ஏழாவது டெஸ்ட் டியூப் கல்கண்டுவில் வெளியானது. இதுவரை 1500 நாவல்கள் எழுதி உலக சாதனைப் படைத்திருக்கிறார் ராஜேஷ்குமார். 2000 சிறுகதைகள், 250 தொலைக்காட்சித் தொடர்கள் என அவர் சாதனைகள் தொடர்கின்றன.