ஊதியம் ரூ.35,000.. தமிழகத்தில் 2,748 கிராம உதவியாளர் பணியிடம் காலி.. 5ம் வகுப்பு முடித்தாலே போதும்
சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு 5ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பம் செய்யலாம். மாத சம்பளமாக மாதம் ரூ.35 ஆயிரம் வரை கிடைக்கும்.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பும் கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசின் வருவாய்த்துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்களை தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் விபரம் வருமாறு:
மத்திய அரசு பணி பதவி உயர்வில் ஓபிசி இடஒதுக்கீட்டுக்காக அரசியல் சட்ட திருத்தம்: திமுக எம்.பி. வில்சன்
மொத்த காலியிடங்கள் எவ்வளவு?
தமிழ்நாடு வருவாய்த்துறையில் மொத்தம் 2,748 கிராம உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இந்த பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த பணிகள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை மாவட்ட வாரியாக நிரப்ப கலெக்டர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி - வயது வரம்பு என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 5ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்ய விரும்புவோரின் குறைந்தபட்ச வயது 21 ஆகவும், அதிகபட்ச வயது 34 ஆகவும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, டிசி, கணவரை இழந்த பெண்கள் உள்ளிட்டவர்கள் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம் எவ்வளவு?
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை கிடைக்கும். விண்ணப்பதாரர்கள் கிராமத்தை பற்றிய விவரங்கள் அல்லது நில வகைப்பாடுகள் அல்லது கிராம கணக்குகள் அல்லது மாவட்ட கலெக்டர் கூறும் தலைப்பு பற்றி சிறிய கட்டுரை எழுத வேண்டி இருக்கும். மேலும் தமிழ் வாசிக்க தெரியும் என்பதை காட்டும் வகையில் சில தமிழ் பாராக்களை படித்து காண்பிக்க வேண்டி இருக்கும்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய நவம்பர் 7 ம் தேதி கடைசி நாளாகும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here