150ல் ஜிஎஸ்டியைக் குறைச்சுட்டு...மீதிய கொடுத்துட்டோம்.. தெறிக்கும் குஜராத் ட்வீட்ஸ் #GujaratVerdict
குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேச மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
சென்னை: குஜராத் தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு அளித்துள்ள தீர்ப்பு குறித்து நெட்டிசன்கள் டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 80 இடங்களிலும் பிடித்து பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. அதேபோல் ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜக 44 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும் மற்றவை 3 இடங்களிலும் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் பாஜக தோல்வி அடையும் என்று எதிர்பார்த்திருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்து குஜராத் தேர்தல் முடிவுகள் குறித்து டுவிட்டரில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
|
அதான் குறைச்சோம்
டிவி நெறியாளர்: பாஜக 150 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறியிருந்தது. ஏன் குறைந்துவிட்டது
குஜராத் மக்கள்: ஏன்னா ஜிஎஸ்டிக்காக 150-ஐ கழித்துக் கொண்டு மீதமுள்ள தொகுதிகளை அளித்து விட்டோம்.
|
இப்படிதானே
கடைசி நேரத்தில் பாஜக எப்படி வென்றது என்கிறார் இந்த நெட்டிசன்.
|
இலக்கு அடைந்துவிட்டது
இந்தியாவுக்காக பாஜக சென்சுரி அடிக்காததை போன்று உள்ளது. எனினும் 99 பெற்றது சென்சுரியாக கருதுகிறோம். இலக்கை அடைந்துவிட்டது பாஜக.
|
இலவசங்கள்
குஜராத் மக்கள் வளர்ச்சிக்கு வாக்களித்தார்கள், இலவசங்களுக்காக அல்ல. தரத்துக்கு வாக்களித்தார்கள், இடஒதுக்கீட்டுக்கு அல்ல... வேலைவாய்ப்புகளுக்காக வாக்களித்தார்கள், பணி ஊக்கத்தொகைக்காக அல்ல.