காதல் மகிழ்ச்சியா...மாயையா...காதலர் தின விழாவில் தெரியும்
தமெரிக்கா டிவி, தில்லி கலை இலக்கியப் பேரவை, டோக்கியோ தமிழ்ச் சங்கம், மெல்பர்ன் தமிழ்ச் சங்கம், தபம்ஸ் குழுமம் ஆகியன இணைந்து பிப்ரவரி 13 ம் தேதி காதலர் தின விழா 2021 ஐ கொண்டாட திட்டமிட்டுள்ளன.
இவ்விழாவில் பன்னாட்டு சிறப்பு பேச்சாளர்கள் பங்குபெறும் பட்டிமன்றம், இணையவழியில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மாலை 5.40 மணிக்கு, ஜூம் செயலி வழியாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

காதல் மகிழ்ச்சியா...மாயையா என்ற தலைப்பில் நடைபெற உள்ள இந்த சிறப்பு பட்டிமன்றத்தின் நடுவராக அண்ணா சிங்காரவேலு செயல்பட உள்ளார். காதல் மகிழ்ச்சியே என்ற தலைப்பில் டோக்கியோவில் இருந்து அசோக், அமெரிக்காவில் இருந்து விஜிராஜா, இந்தியாவின் திருவாரூரில் இருந்து சினேகா ஆகியோர் பேச உள்ளனர்.
காதல் மாயையே என்ற தலைப்பில் நியூசிலாந்தில் இருந்து நித்யா சுரேஷ், துபாயில் இருந்து சசி எஸ்.குமார், மலேசியாவில் இருந்து த.மகாதேவன் ஆகியோர் வாதிட உள்ளனர்.
இந்நிகழ்ச்சியை திரைப்பட பாடகர் வேல்முருகன் தொடங்கி வைக்க உள்ளார். ஆஸ்திரேலியா மெல்பர்ன் தமிழ்ச் சங்க தலைவர் சுந்தரேசன் நடேசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி தூர்தர்ஷன் நிலைய நிகழ்ச்சி தலைவரும், எழுத்தாளருமான கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
தமேரிக்கா டிவி நிறுவனர் மகேஷ் நாட்டாண்மை வரவேற்புரை வழங்க, டோக்கியோ தமிழ்ச் சங்க நிறுவன தலைவர் கணேசன் ஹரி நாராயணன் தொடக்கவுரை நிகழ்த்த உள்ளனர். தபம்ஸ் குழுமம் நிறுவனர் முனைவர் பா.மேகநாதன், பெங்களூரு ர.தேன்மொழி நெறியாள்கை செய்ய உள்ளனர்.
தில்லி கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் பா.குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க உள்ளார். சென்னையை சேர்ந்த ரெயின்போ இவன்ட் மணி மஞ்சு குழுவினர் இசைவிருந்து படைக்க உள்ளனர்.
ஆஸ்திரேலிய இன்பத் தமிழ் ஒலி வானொலி நிறவனர் பாலசிங்கம் பிரபாகரன் மற்றும் தில்லி கலை இலக்கியப் பேரவை புரவலர் கே.வி.கே.பெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர். தில்லி கலை இலக்கியப் பேரவை தலைவர் ப.அறிவழகன் நன்றியுரை வழங்க உள்ளார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications