தமிழகத்தில் இன்று
சென்னை:
கூட்டாட்சித் தத்துவத்தை இலங்கையை ஒத்துக் கொள்ளச் செய்ய வேண்டும். அதன்பிறகுதான் இலங்கைப் பிரச்னையில் இந்தியா தலையிட வேண்டும் என்று ஜனதாகட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி யோசனை தெரிவித்தார்.
எப்படியும் இலங்கைப் பிரச்சனையில் இறுதியில் இந்தியா தலையிட்டே ஆகவேண்டும். அந்த சமயத்தில் கடந்த முறை போல் இல்லாமல் மிகவும்புத்திசாலித்தனமாக இந்திய அரசு நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் சமரசம் என்ற பெயரில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்முயற்சியில் இந்தியா இறங்கக்ககூடாது. அதற்கு பதிலாக பிரபாகரனையும் பொட்டுஅம்மனையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சென்னையில் செவ்வாய்க் கிழமை அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டி;
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலிலிதா - சசிகலாவுக்கு சொந்தமான ஜெயா டி.வியில் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.
பழ. நெடுமாறன் பேட்டியை ஒளிபரப்புகின்றனர்.
புலிகளை பெரிய ஹீரோக்களாக சித்தரிக்கின்றனர்.அதை தடை செய்யவேண்டும்.வீரமணி, நெடுமாறன், சசிகலாவின் நடராஜன், டாக்டர் கிருஷ்ணசாமிஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
வை.கோ., டாகடர் ராம்தாஸ் ஆகியோருக்கு புலிகளை ஆதரித்தே தீர வேண்டியகட்டாயம் உள்ளது. அவர்கள் புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு கட்சிநடத்துகின்றனர்.
இவர்களுக்கு டில்லியில் செல்வாக்கு உள்ளது என்று நம்பி புலிகள் பணம்கொடுத்ததுள்ளனர். ஆனால், இப்போது இவர்களுக்கு எந்த செல்வாக்கும் இல்லைஎன்பதை புலிகள் புரிந்து கொண்டனர்.
இவர்களுக்கு மட்டுமல்ல; இவர்களின் தலைவராக டில்லியில் இருக்கும் மத்தியஅமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டசுக்கும் செல்வாக்கு இல்லை. இப்போது இவர்கள்பேச்சை கேட்டு இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பாமல் இந்தியா இருக்கலாம்.
ஆனால், கடைசியில் எப்படியும் இந்தியா தலையிட்டுத் தான் ஆகவேண்டும்.அப்படிஒரு கட்டாயத்தில் கடந்த கால அனுபவம் போல் இல்லாமல் மிகவும்புத்திசாலித்தனமாக மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும்.
கூட்டாட்சித் தத்துவத்தை இலங்கையை ஒத்துக் கொள்ளச் செய்ய வேண்டும். அந்தபிறகு தான் இந்தியா தலையிட வேண்டும். ராணுவத்தை அனுப்புவது என்றால்,முதலில் கொழும்புக்கு அனுப்ப வேண்டும். பின்னர் தான் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பவேண்டும்.
தமிழ்நாட்டில் மூப்பனார் தலைமையில் புதிய அணியை ஏற்படுத்தும் முயற்சியில்ஈடுப்ட்டுள்ளேன். தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் செல்வாக்கு இழந்து வருகின்றன.தேசிய கண்ணோட்டம் உள்ள கட்சிகளுக்கு தான் ஆதரவு உள்ளது.
இப்படி தான் தமிழகத்தில் 96ல் ஒரு அணியை உருவாக்கினேன். அதன் பின்னர் 98ல்உருவாக்கினேன். அந்த அணிகள் வெற்றி பெற்றன. ஆனால், அந்த அணியில் நான்நீடிக்க முடியாமல் போனது என் துரதிர்ஷ்டமே என்றார் சுவாமி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications