தடா கைதிகள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் 19 ம் தேதி விசாரணை
டெல்லி:
தடா கைதிகள் விடுவிப்பு தொடர்பாக, கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனு மீதான விசாரணை செப்டம்பர் 19 ம் தேதி நடக்கும்என்று சுப்ரீம்கோர்ட் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால், மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் 121 பேர் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு சிறைகளில்அடைக்கப்பட்டுள்ள 5 தமிழ் தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று வீரப்பன் நிபந்தனை விதித்திருந்தான்.
அதன்படி, தமிழ்க, கர்நாடக அரசுகள் கைதிகளை விடுவிக்க முடிவு செய்தது. ஆனால் சுப்ரீம்கோர்ட் கைதிகளை விடுவிப்பதற்கு தடை விதித்திருந்தது. மேலும்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று இருமாநில அரசுகளும் எடுத்த முடிவு குறித்து சுப்ரீம்கோர்ட்டுக்கு 10 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழக, கர்நாடக அரசுகள் சுப்ரீம்கோர்ட்டில் பதில் மனுக்களைத் தாக்கல் செய்தன. இந்த பதில் மனுக்கள் குறித்த விவரங்களைசோலிசிட்டர் ஜெனரல் ஹரீஷ் சால்வே தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட டிவிஷன் பென்ஞ்சிடம்தெரிவித்தார்.
இதைப் பெற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் கர்நாடக அரசு தாக்கல் செய்த பதில் மீதான விசாரணை செப்டம்பர் 19 ம் தேதி நடக்கும்என்றார்.