யானையின் அட்டகாசத்தால் வானில் 30 நிமிஷம் வட்டமடித்த விமானம்
கவுஹாத்தி:
கவுஹாத்தி விமானநிலையத்திலுள்ள ரன்வேயில் யானை ஒன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பெரும் ரகளையில் ஈடுபட்டது. இந்தச் சம்பவத்தால்கல்கத்தாவிலிருந்து வந்த விமானம் ஒன்று தரையிறங்க முடியாமல் அரைமணி நேரம் வானிலேயே வட்டமடித்தது.
இதுகுறித்து விமானநிலைய ஆணைய இயக்குநர் லீலா போரா கூறியதாவது:
கல்கத்தாவிலிருந்து 250 பயணிகளை ஏற்றிக்கொண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கவுஹாத்தி வந்தது. அந்த விமானம் கவுஹாத்தியிலுள்ள லோகப்பிரியாசர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்க வேண்டும்.
ஆனால், விமானநிலையத்தில் போடப்பட்டிருந்த பாதுகாப்பையும் மீறி, அங்கு நுழைந்த மதம் பிடித்த யானை ஒன்று தாறுமாறாக ஓடி கலாட்டா செய்தது.இதனால் விமானத்தைத் தரையிறக்க வேண்டாம் என்று பைலட்டிடம் தகவல் கொடுத்தோம்.
இதனால் விமானம் தரையிங்க முடியாமல் வானிலேயே நகர் முழுவதும் அரைமணிநேரம் வட்டமடித்தது. அதற்குப்பின் வனஇலாகாத் துறையினரும்,போலீஸாரும் விமானநிலையப் பகுதியில் பட்டாசுகளை வெடித்தனர். அதற்குப்பின் அப்பகுதியிலிருந்து யானை நகர்ந்து சென்றது.
தற்போது விமானநிலையத்தில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கவுஹாத்தி விமானநிலையத்தில் மதம் பிடித்த யானை கலாட்டா செய்வது இதுவேமுதல்முறை. இதுபோல் எதிர்காலத்தில் சம்பவங்கள் ஏற்படக் கூடாது என்பதில் விமானத்துறையினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம்என்றார்.
இதுகுறித்து உயர்போலீஸ் அதிகாரி அனில் செளத்ரி கூறுகையில், கடந்த வியாழக்கிழமை முதல் காட்டிலிருந்து தப்பித்து வந்த இந்த யானை தேசியநெடுஞ்சாலையில் பெரும் ரகளையை ஏற்படுத்தியது. அதற்குப்பின் இந்த யானை எப்படியோ வெள்ளிக்கிழமை அதிகாலை விமானநிலையத்துக்குள்நுழைந்திருக்கிறது.
கடந்த இரண்டு வருடமாக அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தில் யானைகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. இதுவரை 3 மில்லியன் வரைபொருட்கள் சேதமடைந்துள்ளன. கடந்த ஒரு வருடத்தில் இதுவரை 100 பேர் யானைகள் மிதித்து இறந்துள்ளனர்.
மேலும், கடந்த மாதம் அசாமில் காட்டிலிருந்து தப்பித்து வந்த மதம் பிடித்த யானை நடுரோட்டில் அட்டகாசம் செய்தது. இதனால் காலைவேளையில்போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சில ஆட்டோக்கள் மற்றும் சில வாகனங்கள் சேதமடைந்தன என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications