For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பனைப் பிடிக்க எல்லைப் பாதுகாப்புப் படை கோவை வருகை

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

வீரப்பனைப் பிடிக்க எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் வெள்ளிக்கிழமை கோவை வருகின்றனர்.

வீரப்பனைப் பிடிக்க மணிப்பூரிலிருந்து கமாண்டோ படையினர் தனி விமானம் மூலம் கோவை வருகின்றனர். முதலில் இவர்கள் பெங்களூர் வந்து அங்கிருந்துதனி வாகனம் மூலம் பண்ணாரி காட்டிற்கு அழைத்துச் செல்லப்படாலம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நீலகிரி மலைப் பகுதிக்கு வீரப்பன் நுழையலாம் என்ற எதிர்பார்ப்பையடுத்து, தனி விமானத்தின் மூலம் இந்தப் படையினர் கோவைக்குவருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடக அதிரடிப்படையினர் கூட்டு முயற்சியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அடுத்து வந்திறங்கும் கமாண்டோ படைவீரர்களுக்கு உதவியாக இவர்கள் செயல்படவுள்ளனர்.

கமாண்டோக்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரம் அதிரடிப்படையினர், கர்நாடகத்தைச் சேர்ந்த ஆயிரம் அதிரடிப்படையினர் ஆகியோர் வீரப்பனைத் தேடும்பணியில் ஈடுபடுவர். மத்திய அரசு அனுப்பியுள்ள இந்த கமாண்டோப்படையினர் அஸ்ஸாம் காடுகளில் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். இவர்களிடம் ஏ.கே 47ரகத் துப்பாக்கி உட்பட பல்வேறு வகையான நவீன ஆயுதங்கள், கண்ணி வெடிகளைக் கண்டறியும் கருவிகள் உட்பட தொழில்நுட்பக் கருவிகளை எடுத்துவருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X