குவியல் குவியலாக சடலங்கள்
அஹமதாபாத்:
குடியரசு தினத்தன்று குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தின் கோரப்பிடியில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 20,000 மாக உயர்ந்துள்ளது.
இடிந்து விழுந்த கட்டிடங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. சனிக்கிழமை காலை மீண்டும் நிலநடுக்கம்ஏற்பட்டதால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
அடுக்குமாடிக் கட்டிடங்களில் குடியிருப்பவர்கள் வீட்டைக் காலி செய்து விட்டு வெட்டவெளியில் கூடாரமிட்டுத் தங்கியுள்ளார்கள். அவர்கள் மீண்டும் தங்கள்வீடுகளுக்குச் செல்லப் பயப்படுகின்றனர்.
இந்தப் பாதிப்பிலிருந்து குஜராத் மாநிலம் மீள இன்னும் 20 ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக மாநில காவல்துறை அமைச்சர் ஹரன் பாண்டியா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
இந்த பயங்கர சம்பவத்தில் இதுவரை 20,000 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எவ்வளவு பேர் பூமிக்கடியில் சிக்கியுள்ளனர் என்றுதெரியவில்லை. தோண்டும் இடமெல்லாம் பிணங்கள் கிடக்கிறது. இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கிடையில் உயிருடன் தவித்துக் கொண்டிருப்பவர்களை மீட்கும்பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
மீட்புப்பணியில் சி.ஆர்.பி.எஃப், ராணுவத்தின் பல பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். புல்டோசர் மிஷின்கள், கனரக இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
குவியல், குவியலாகப் பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பலியானவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதும், அவர்களது உறவினர்களைத் தேடிக்கண்டுபிடிப்பதும் பெரும் சிரமமாக உள்ளது.
10 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பச்சாவ் நகரமும், 15 ஆயிரத்துக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட ரப்பார் நகரமும் பெரும் அழிவைச்சந்தித்துள்ளன. இடிபாடுகளை அகற்றும் போது பலியானவர்களின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கைத் தாண்டும் என்று தெரிகிறது.
பூகம்பத்தில் சிக்கி சேதமடைந்துள்ள குஜராத் மாநிலத்தின் நிவாரணப்பணிக்காக உடனடியாக ரூ 500 கோடி ரூபாய் வழங்குமாறு மத்திய அரசிடம்கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.
யு.என்.ஐ.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications