நாக்பூரிலிருந்து நிபுணர்கள் வருகை
காட்பாடி:
காட்பாடி வெடிமருந்துத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கான காரணம் என்னவென்று இன்னும்தெரியாத நிலையில், நாக்பூரிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் இங்கு வரவுள்ளனர்.
இந்நிலையில், வெடிவிபத்திற்கான உண்மையான காரணத்தை அறிய, நாக்பூர் வெடிமருந்துதொழிற்சாலையிலிருந்து நிபுணர்கள் விரைவில் இங்கு வரவுள்ளனர்.
29 பேரைப் பலிவாங்கிய இந்த வெடிவிபத்திற்கு மனிதத் தவறுகளே காரணம் என்று கூறப்படுகிறது.
ஏனென்றால், சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஐ.எஸ்.ஓ. 9002 சான்றிதழை இந்தத் தொழிற்சாலைபெற்றுள்ளது. மேலும், சிறந்த பாதுகாப்புக்கான பரிசையும் இது பெற்றுள்ளது.
இந்த வெடிமருந்துத் தொழிற்சாலையில் வேலை பார்த்தவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களே.
இதற்கு முன் இங்கு வேலை பார்த்து, பலியானவர்களின் மனைவி-குழந்தைகளுக்கும் இங்கு வேலைவாய்ப்புகொடுக்கப்பட்டுள்ளது. இப்படி வேலை கிடைத்த சில விதவைப் பெண்களும் இந்த வெடிவிபத்தில் பலியானதுதான்சோகத்திலும் சோகம்.