லண்டன் ஓட்டல் வழக்கில் ஜெ.க்கு சம்மன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

லண்டன் ஓட்டல் வழக்கில் அக்டோபர் 4ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று முதன்மை செசன்ஸ்நீதிமன்றம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 1994ம் ஆண்டு லண்டனில் 2 ஓட்டல்கள் வாங்கியதில் அன்னியச் செலாவனி மோசடி நடந்துள்ளதாகமுதல்வர் ஜெயலலிதா, சசிகலா மற்றும் தினகரன் எம்.பி. ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இந்த வழக்குச் சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் ரூ.43.98 கோடி விலை கொடுத்து 2ஓட்டல்களை தினகரனுக்குச் சொந்தமான 2 நிறுவனங்கள் வாங்கியுள்ளன. பிறகு கடந்த 1998ம் ஆண்டு இந்த 2ஓட்டல்களும் ரூ.121 கோடி விலையில் விற்கப்பட்டன.

இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அசோக்குமார், முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அந்த வழக்கில் 2-வதுகுற்றவாளியாகக் கருதப்படும் தினகரனுக்கும் சம்மன் அனுப்பியுள்ளார். அதில் அக்டோபர் 4ம் தேதி 2 பேரும்கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீதிபதி அசோக்குமார், "அந்த வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரியிடம், கடந்த ஜூன் 12ம்தேதி சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் அந்த 2 பேருக்கும் நீங்கள் சம்மன் அனுப்பவில்லை" என்றுகேட்டார்.

அதற்கு, வழக்கு பற்றிய விசாரணை அப்போது தொடர்ந்து நடந்துகொண்டிருந்ததால் அவர்களுக்கு சம்மன்அனுப்பவில்லை என்று விசாரணை அதிகாரி கூறினார். மேலும் வழக்கில் முதல்குற்றவாளியான ஜெயலலிதா மீதுசாட்டப்பட்ட குற்றத்திற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, "விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. அதனால் சம்மன் அனுப்பத் தேவையில்லை, என்றுநீங்கள் ஏன் அப்போது கூறவில்லை?" என்று விசாரணை அதிகாரியிடம் நீதிபதி கேட்டார். மேலும் விசாரணைநடந்துகொண்டிருக்கும் போது சம்மன் அனுப்பக் கூடாது என்று நிபந்தனைகள் எதுவும் இருக்கிறதா என்றுசட்டப்பிரிவிடம் அவர் கேட்டார்.

பிறகு, ஜெயலலிதா முதல்வராக இருக்கிறார் என்பதால் அவருக்கு சம்மன் அனுப்பவில்லையா என்றும் நீதிபதிவிசாரணை அதிகாரியிடம் கேட்டார். மேலும் விசாரணை அதிகாரி சம்மன் அனுப்பத் தயாராக இருக்கிறாரா என்றுஎழுத்து மூலம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று சட்டப்பிரிவிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக நடந்த வாதத்தின் போது நீதிபதியிடம் விசாரணை அதிகாரி கூறியதாவது,

இந்த வழக்கில் முன்னாள் விசாரணை அதிகாரி அருணாச்சலம் மற்றும் அமலாக்கப் பிரிவுத் துணை இயக்குநர்சுப்ரமணியம் உட்பட 4 பேர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் விசாரிக்கப்பபட்டுள்ளனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+