Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாணியம்பாடியில் காட்டு யானை தாக்கி 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வாணியம்பாடி அருகே காட்டிற்கு விறகு பொறுக்கச் சென்ற 2 பெண்களை காட்டு யானை துதிக்கையால் தூக்கிவீசியதால் பலியானார்கள்.

வாணியம்பாடி ரெங்கநாதபுரத்தைச் சேர்ங்ந்த ஆனந்தன் என்பவரின் மனைவி செல்வம். அதே பகுதியைச் சேர்ந்தசுப்ரமணி என்பவரது மனைவி ஜெல்லம்மாள்.

இவர்கள் 2 பேரும் கடந்த புதன்கிழமை உமராபாத் அருகே உள்ள மேல்கூர்பாளையம் மலைக்கு விறகு பொறுக்கச்சென்றுள்ளனர். இவர்களுக்கு பின்னால் சற்று தூரத்தில் ஆறுமுகம் என்பவர் நடந்து சென்றுள்ளளார்.

காட்டுக்குள் இந்த 3 பேரும் சென்றுகொண்டிருக்கும் போது திடீரென ஒர காட்டு யானை வந்து செல்வத்தையும்,ஜெல்லம்மாளையும் துதிக்கையால் தூக்கி மரங்களின் மேல் வீசியுள்ளது.

இதில் அந்த 2 பெண்களும் இறந்து போனார்கள். இதைக்கண்டு மிரண்டுபோன ஆறுமுகம் ஓட்டம்பிடித்து வீடுவந்துசேர்ந்தார்.

இதுகுறித்து உமராபாத் போலீசார் விசாரணை செய்துவருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+