பாகிஸ்தானுக்கு நிதி உதவி, ஹெலிகாப்டர்கள் வழங்கும் அமெரிக்கா
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானை ஒட்டிய தனது எல்லையைக் கண்காணிக்க பாகிஸ்தானுக்கு உதவ அமெரிக்காதிட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான் மீதான தடைகள் நீக்கப்பட்டுவிட்டதால் இந்த உதவுகள் சாத்தியமாகியுள்ளன என அந் நாட்டுக்கானபாகிஸ்தான் தூதர் வெண்டி சேம்பர்லின் கூறினார்.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே தோர்ஹம், சமன் ஆகிய இடங்களில் தான் எல்லைக் கதவுகள் உள்ளன.இதன் வழியே தான் அதிகாரப்பூர்வமாக இரு நாட்டினரும் பரஸ்பரம் அடுத்த நாட்டுக்குள் நுழைய முடியும். இதுதவிர ஒற்றையடிப் பாதை இணைப்புகளும் உள்ளன. இவற்றில் குதிரைகள், கழுதைகள் மூலம் இரு நாடுகள்இடையே பொருள்கள் கடத்தப்பட்டு வருகின்றன.
இவை தவிர ஆயிரக்கணக்கான கி.மீ. நீளம் கொண்ட எல்லை முழுக்க மலைகளும், குகைகளும் நிறைந்துள்ளதால்ஆயிரக்கணக்கானவர்கள் இரு தரப்பிலும் சட்டவிரோதமாக சென்றுவருவது மிக சுலபமாக இருந்தது.
இதுவரை இதைப்பற்றி பாகிஸ்தான் கவலைப்பட்டதே இல்லை. தனது நாட்டின் தீவிரவாதிகளைஆப்கானிஸ்தானுக்குள் சென்று வர பாகிஸ்தான் அனுமதித்தது. அதே போல ஆப்கானிஸ்தானில் இருந்துகடத்தல்காரர்களையும் பாகிஸ்தான் ராணுவம் கண்டுகொண்டது இல்லை.
இரண்டும் ஒரே நாடு போலத்தான் செயல்பட்டு வந்தன. தலிபான்களுக்கு ராணுவ பயிற்சி தந்ததே பாகிஸ்தான்ராணுவத்தினர் தான்.
ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. நெருக்குதல் காரணமாக அமெரிக்காவுக்கு உதவுவதாக பாகிஸ்தான்அறிவித்துவிட்டது. இதனால் தலிபான் தீவிரவாதிகளின் நேரடித் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயத்தில்பாகிஸ்தான் உள்ளது.
இதைத் தொடர்ந்து இப்போது தான் தனது எல்லையைப் பாதுகாக்கும் வேலையில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.இதற்காக அமெரிக்க உதவியையும் கோரியுள்ளது.
50 மில்லியன் டாலர் உதவி:
பாகிஸ்தானை பல விதத்திலும் ஐஸ் வைத்து வரும் அமெரிக்கா முதல் கட்டமாக 50 பில்லியன் டாலர் நிதி உதவியைவழங்கியுள்ளது.
கடும் பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ள பாகிஸ்தான் இப்போது தனது நாட்டு ராணுவத்தை தயார் நிலையில்வைக்க வேண்டிய நிலையில் உள்ளது. எல்லையைப் பாதுகாக்கவும் உள்நாட்டு பொருளாதார தேவைகளைசமாளிக்கவும் கூடுதலாக நிதி இல்லாமல் திண்டாடி வருகிறது.
இதையடுத்து பாகிஸ்தானுக்கு உடனடி உதவியாக 50 மில்லியன் டாலர் வழங்க அமெரிக்க அதிபர் புஷ்உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் வெளிநாட்டு உதவித் திட்டத்தின் கீழ் இந்த நிதி வழங்கப்படுகிறது. அமெரிக்காவின்பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நிதி உதவியை அளிப்பதாக அதிபர் புஷ் கூறியுள்ளார். பலஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துள்ள பெரிய உதவி இது தான்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications