பன்னீர் - ஆளுநர் திடீர் சந்திப்பு
சென்னை:
தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (புதன்கிழமை) காலை தமிழக ஆளுநர் சி.ரங்கராஜனை சந்தித்துபேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பு சுமார் 20 நிமிட நேரம் நீடித்தது. ஆளுநரை சந்தித்த பின் வெளியே வந்த முதல்வர், அங்குகாத்திருந்த செய்தியாளர்களிடம் பேச மறுத்துவிட்டு சென்று விட்டார்.
கடந்த வாரம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து ஆளுநர் ரங்கராஜனுடன்முதல்வர் விவாதித்திருக்கூடும் என்று கூறப்படுகிறது.
கடந்த மாதம் 21ம் தேதி ஜெயலலிதா முதல்வராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம்தீர்ப்பளித்ததையடுத்து அவர் பதவி ரத்தானதையடுத்து, தமிழகத்தின் புதிய முதல்வராக பெரியகுளம்எம்.எல்.ஏவான ஓ. பன்னீர்செல்வம் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த வாரம் பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கியமுடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், இந்த முடிவுகள் குறித்து ஆளுநரின் ஒப்புதல் பெற்ற பின்பே செய்தியாளர்களிடம்கூற முடியும் என்றும் முதல்வர் கூறியிருந்ததார்.
இந்நிலையில் புதன்கிழமை காலை ஆளுநரை முதல்வர் சந்தித்து பேசியது முக்கியத்துவம் பெறுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications