நாளை பறக்கிறது இன்சாட்-3சி
பெங்களூர்:
இந்தியாவின் தொலைத் தொடர்பு செயற்கைக் கோளான இன்சாட்-3சி நாளை (வியாழக்கிழமை) விண்ணில்செலுத்தப்படவுள்ளது.
செயற்கைக் கோளை ஏவுவதற்கான அனைத்துப் பணிகளும் முடிவடைந்து விட்டதாக பெங்களூரில் உள்ள இந்தியவிண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
சுமார் 2,750 கிலோ எடையுள்ள இன்சாட்-3சி கடந்த டிசம்பர் 4ம் தேதியே கொருவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது.
பெங்களூரிலிருந்து 180 கி.மீ. தொலைவில் உள்ள ஹாசன் மாஸ்டர் கன்ட்ரோல் மையம், இன்சாட்-3சி செயற்கைக்கோளை தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டிலும் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளது.
ஏற்கனவே விண்ணில் சுற்றிவரும் இன்சாட்-2சியின் ஆயுள் விரைவில் முடியவிருப்பதால், தற்போது இன்சாட்-3சிஏவப்படவுள்ளது. தொலைத் தொடர்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு இன்சாட்-3சி உதவும்.
இந்தியாவின் முதல் செயற்கைக் கோளான "ஆப்பிள்" (1981) முதல் தற்போதைய "இன்சாட்-3சி" வரை மொத்தம் 8செயற்கைக் கோள்கள் ஏரியன் ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் அனுப்பப்பட்டுள்ளன.
தற்போது அனுப்பப்படவுள்ள இன்சாட்-3சி செயற்கைக் கோள் முழுக்க முழுக்க இஸ்ரோவிலேயேதயாரிக்கப்பட்டது.
சுமார் ரூ.250 கோடியில் இன்சாட்-3சி தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த செயற்கைக் கோளை ஏவுவதற்குமட்டும் ரூ.350 கோடி செலவாகும் என்று இஸ்ரோ கூறியுள்ளது.
அடுத்த 12 ஆண்டுகளுக்கு இன்சாட்-3சி செயல்படும் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.
தூர்தர்ஷனில் ஒளிபரப்பு:
இன்சாட்-3சி செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்படுவதை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புசெய்கிறது.
இந்த நேரடி ஒளிபரப்பு நாளை காலை 3.45 மணிக்கே துவங்குகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications