அவமதிப்பு வழக்கு: திருச்சி நீதிமன்றத்தில் "நக்கீரன்" கோபால் ஆஜர்
திருச்சி:
புதுக்கோட்டை பாதியார் தொடர்ந்த அவமதிப்பு வழக்கு தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில்"நக்கீரன்" பத்திரிக்கையின் ஆசிரியர் கோபால் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் கலியமங்கலத்தைச் சேர்ந்தவர் பாதியார் குழந்தை சாமி. கடந்த 1998ம்ஆண்டு "நக்கீரன்" வார இதழில் இவர் குறித்த கட்டுரை வெளியாகியிருந்தது.
அதில் தன்னை அவமதிக்கும் வகையில் கோபால் எழுதியிருப்பதாகக் கூறி திருச்சி நடுவர்நீதிமன்றத்தில் குழந்தை சாமி வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்குவந்தது.
இதையடுத்து சென்னை சிறையிலிருந்து கோபால் நேற்று திருச்சி கொண்டு செல்லப்பட்டு அங்குள்ளசிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் இன்று காலை அவர் திருச்சி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கைவிசாரித்த நீதிபதி மீண்டும் கோபாலை வரும் 19ம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் எனஉத்தரவிட்டார். இதையடுத்து சென்னை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கோபால்.
கோபால் ஆஜர்படுத்தப்பட்டதையொட்டி திருச்சி நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தன.
கோபாலைச் சந்திக்க அவருடைய குடும்பத்தினரும், "நக்கீரன்" ஊழியர்களும் முயற்சித்தனர். ஆனால்அவர்களுக்குப் போலீசார் அனுமதி அளிக்காததைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையேலேசான "தள்ளு முள்ளு" ஏற்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications